அந்த அழகான கிளிக்கு
செக்கச் சிவப்பான மூக்காம்.
அந்தக் காட்டிலேயே
அதுதான் அழகுனு
அடிச்சுச்சாம் தம்பட்டம்
அதைக் கேட்ட புறாவுக்கு
வந்துச்சாம் கோபம்
“மிளகாய் பழம் போல்
கோணல் மூக்குக்காரி நீ
உன்னைவிட அழகிகள்
ஊருக்குள் இருக்கிறார்கள் நிறைய”
என்றுதான் சொல்லிச்சாம்..
ஊருக்குள்ள வந்த கிளி
உதட்டுச்சாயம் போட்ட
பெண்ணைத்தான் பார்த்துச்சாம்
அத்தோடு அதன் ஆணவம்
அழிஞ்சுத்தான் போச்சுதாம்!
...................பரிதி.முத்துராசன்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |