அன்பே! நீ
உன் பற்கள் தெரிய
சிரிக்காதே!.
நீ சிரிக்கும் போது
உன் பல்லழகைப்
பார்த்ததாலே.....
நீ
ஆழ் கடலின்
அழகிய முத்துக்களை
அபகரித்து விட்டதாக....
முத்துச்சிப்பிகள்
புகார் கொடுக்க
புறப்பட்டுவிட்டன....!
அன்பே! நீ
உன் தோள் அசைய
நடக்காதே!
நீ அசையும் போது
உன் தோள் அழகைப்
பார்த்ததாலே.......
நீ
அடர்ந்த வனத்தில்
வளர்ந்த மூங்கில்களை
அள்ளி வந்ததாக....
உன்னைத் தழுவிய
தென்றல் காற்று
முகாரி பாடுகின்றது...!
அன்பே! நீ
அந்த பூவனம் உள்ளே
போகாதே!
நீ பூவனம் போனதால்
உன் மேனியில் வீசும்
நறுமணத்தை முகர்ந்து...
நீ
அந்தப் பூவனத்தின்
மலர்கள் வாசனையை
மிஞ்சி விட்டதாக...
மலர்கள் அனைத்தும்
மண்ணில் உதிர்ந்து
உயிரை மரித்தன..!
அன்பே! நீ
உன் கண்களை
சிமிட்டாதே!
நீ கண்சிமிட்டும் போது
பாய்ந்து வரும் கதிர்வீச்சை
விஞ்ஞானிகள் ஆய்வு செய்து ...
நீ
இரு விழிகளிலும்
அணுஉலைகளை
பதுக்கியதாகப் புலம்ப...
(கோபப்படாதே, பெண்ணே!
வள்ளுவர் காலத்தில்தான்
வேலும் அம்பும் உண்டு.)
மின்வெட்டில் தவிப்போர்
மின்சாரம் கிடைக்குமென்று
ஆவலுடன் இருக்கிறார்கள்!
***********************************************************
கிடைத்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்பதே காகங்களின்
தனித்தன்மை வாய்ந்த குணம் ...இயற்கை படைப்பில் எதிரிகளாக இருக்கும் பூனை,நாய்,காகம்-இவைகள் மூவரும் நண்பர்களாக...
கிடைத்த உணவை பகிர்ந்து உண்ணும அழகு காணக்கிடைக்காத காட்சி....நம்ப முடியாத நட்பு....
நம்பமுடியாத நண்பர்கள்
நன்றி....
தனித்தன்மை வாய்ந்த குணம் ...இயற்கை படைப்பில் எதிரிகளாக இருக்கும் பூனை,நாய்,காகம்-இவைகள் மூவரும் நண்பர்களாக...
கிடைத்த உணவை பகிர்ந்து உண்ணும அழகு காணக்கிடைக்காத காட்சி....நம்ப முடியாத நட்பு....
நம்பமுடியாத நண்பர்கள்
நன்றி....
Pearl Mubee
Laurent Jean Philippe originally shared this post:
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |