பாலிவுட் என்றாலே
ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம்
எப்போதாவது திண்டாட்டம்
இந்த ஆண்டு முழுவதும்
இவர்களின் ஆட்டத்துக்கும்
‘பார்ட்டி’ கொண்டாட்டத்துக்கும்
அளவே இல்லை....
தில்லியில்
பாலியில் வன்கொடுமையில்
பெண் தாக்குண்டபோது
இந்தப் பிரபலங்கள் யாரும்
வாயைத் திறக்கவில்லை
அந்தப் பெண் இறந்ததும்
அத்தனை பேரும் அணிவகுத்து
கண்டன ஊர்வலம்...
சமுதாயத்தைச் சீரழிக்கும்
இந்தச் சினிமாவும்
இந்தச் சினிமா பிரபலங்களின்
பகட்டும் பார்ட்டிகளும்
பயம் காட்டும் மாயைகளும்...?
அது சரி அவர்களாவது அப்படி!
இங்கே இருக்கும் கோடம்பாக்கம் எப்படி?
இந்த பாலிவுட் “பார்ட்டி” கொண்டாட்டங்கள்
கோலிவுட்டுக்கும் பரவுமா..?
பாலிவுட் பார்ட்டிகள் அளவுக்கு
கோலிவுட் பார்ட்டிகள் இல்லை
இருந்தாலும் இவ்வளவு மோசமாக இல்லை...
இருந்தாலும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை!
சூப்பர் ஸ்டார் தன் பிறந்தநாளில்
நல்ல விழிப்புணர்வு செய்தார்
உலகநாயகனும் வானொலியில்
"பெற்றால்தான் பிள்ளையா?"
சமுதாயத்துக்கு நல்லது சொல்லுகிறார்
நிறையப் பேர் ஈமு கோழி வளர்த்தார்கள்
இன்னும் சிலர் ப்ளாட் விற்பனையில்...
இன்னும் சிலர் வேஷ்டி விற்பனையில்...
இந்தச் சினிமா பிரபலங்களால்
இந்தச் சமுதாயத்துக்கு நடப்பவைகள்
தொல்லையா? இல்லையா? தெரியவில்லை...!
.................................பரிதி.முத்துராசன்
**********************************************************
கருத்துக்கணிப்பு-
சினிமாவும் சினிமா பிரபலங்களும் இந்தச் சமுதாயத்துக்குச் செய்வது என்ன?
இக்கருத்துக்கணிப்பின் முடிவுகளை எப்போது வேண்டுமானாலும் நீங்களே காணலாம்?****************************************************************************
பாலிவுட் “பார்ட்டி” கொண்டாட்டத்தை
இந்தக் காணொளியில் காணுங்கள்....
**************************************************************
இப்பதிவைப் பற்றிய தங்கள் கருத்து....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |