google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாசம் பயம் காட்டுகிறதே!

Thursday, December 27, 2012

பாசம் பயம் காட்டுகிறதே!


 

என் அருமை மனைவியே!
என் அருகில்
நீ வரும்போதெல்லாம்...
வருகிறது என் நினைவுக்கு
நாளிதழில் நான் படித்த செய்தி....


 
பாசமுள்ள அவர்கள் இருவரும்
வயோதிகத் தம்பதியினர்
அவரோ மரணப் படுக்கையில்...

அவர் படும் அவஸ்த்தைகளை 
காணப் பொறுக்காத
அவரது மனைவி
சுத்தியலால்
அவர் தலையில் அடித்து...

(கருணைக் கொலை...?)
அவர் இறந்துவிட்டதாக.... 
அய்யோ...பாவம்
அந்தப் பெண்மணியும்
தூக்கில் தொங்கினார்.

பக்கத்து வீட்டுக்காரர்கள்
பதறியடித்து வந்தப் போது...
அவர் கிடந்தார் அரை உயிரில்

பிழைத்துக் கொண்டார் அவர்
மரித்துப் போனார் அவரது மனைவி.


அதனால்தான்...

என் அருமை மனைவியே!
என் அருகில் நீ வரும் போது...
படுத்துக் கிடந்தாலும் நான்
பதறியடித்து எழுகின்றேன்

பாசம் பயம் காட்டுகிறதே!    

...............................பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1