ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த போது டெல்லியில் போராட்டம் நடத்தும் பெண்கள் பற்றித் தரக்குறைவாகப் பேசினார். பழைய பாத்திரங்களுக்கு ஈயம் பூசியது போலச் சில பெண்கள் வருகிறார்கள். மெழுகுவர்த்தி ஏந்திச் செல்வதைப் பேஷனாகக் கருதும் அவர்கள் இரவில் டிஸ்கோத்தே பார்ட்டிக்கு செல்பவர்கள் என்று கூறினார்.
.......நான் சொன்ன கருத்துப் பெண்கள் மனதை காயப்படுத்தி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்
(இது செய்தி-நன்றி மாலைமலர்)
தில்லியில் போராடும் பெண்கள்
ஈயம் பூசிய பாத்திரங்கள்..
அதுவும் பழைய பாத்திரங்கள்
என்று வீரமுலக்கமிடும்
ஜனாதிபதியின் மகன்
அபிஜித் முகர்ஜியே...
யார் இங்கே ஜனாதிபதி?
நீரா..? உமது தந்தையாரா...?
அவரது தொலைக்காட்சி பேச்சு
அவருக்கே தொல்லையாய் போச்சு
போராடும் பெண்கள் முகத்தில்
சாக்கடை பூசிவிட்டார்
உண்மையில் சாக்கடை பூசியது
அவர் முகத்தில்தான்...
அரசியல் பிரமுகரின்
அர்த்தமில்லா பேச்சு....
நாற்றமெடுக்கும் அவர் பேச்சு
நேற்றோடு முடிந்துப்போச்சாம்....
இன்று மன்னிப்புக் கேட்கிறார்
குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு....
இந்தியாவின் முதல் குடிமகனின்
மகனின் பேச்சும்....?
அபிஜித் முகர்ஜி அவர்களே!
நேற்று போராடும் பெண்கள்
ஈயம் பூசிய பழைய பாத்திரங்கள்
இன்று போராடும் பெண்கள்
தங்கம் பூசிய புதுப் பாத்திரங்களா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |