ஏண்டா...அறிவுச்செல்வா..
கொஞ்சநேரம் அசந்து தூங்கினா
இப்படியாடா பண்ணுவானுங்க...?
நேற்று...அந்த டாஸ்மாக் கடை
திறப்புவிழாவுக்கு போனேன்
அவனுக கலருல எதையோ
கலந்து குடுத்துட்டானுங்கடா...
அசதியிலே அப்படியே
அசந்து தூங்கிட்டேன்
காலையில முழிக்கிறவன்
மதியம் முழிச்சேன்...
அதுக்குள்ளே போயிட்டேனு
புரளியைக் கிளப்பிட்டானுங்கடா...
இப்படித்தான் ஒருநாள்
ஆயி போகும்போது
வயிறு சரியில்லே..
கூட அரைமணி நேரம்
உள்ளே இருந்துட்டு வந்தேன்
அதுக்குள்ள..எவனோ
காலரா-னு வதந்தி பரப்பிட்டான்...
அதுவாது பரவாயில்ல..
போனவாரம் காய்ச்சல்னு
டாக்டர் கிட்டப் போனா...
டெங்கு-னு வதந்தி பரப்பிட்டானுக.....
(அவிங்க கிடக்கிரானுக..அண்ணேன்
நீங்க ட்விட்டர்-ல
டெய்லி கீச்சுங்க..ண்ணேன்
அப்பத்தான் நீங்க இருக்குறது
எல்லோருக்கும் தெரியும்...)
இதுவே...பரவாயில்ல
நீ ஒரேயடியா உள்ளே போறதுக்கு
வழி சொல்லுற....பாவி!
*************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |