இப்படித்தான் ஆயிரம் கதைகள்
கட்டி ஆண்டவனை
காட்டினார்களோ? ஆண்டவன் அருகில்
இருப்பதாக அவர்கள் தம்மை
காட்டிக்கொண்டு உயர்ந்தவர்கள்
நாங்கள் என்று உலகுக்கு
உரைத்தனரோ?
அறிவு கொண்டு
சிந்தித்தால் அத்தனையும்
பொய்யாகும் அவர்தம் வாழ்வும்
தீயாகும்
*****************************
காணொளி-கேளடா
மானிடரே....
Thanks-YouTube-Uploaded by Arulan78
on Feb 21, 2010
கள்ளச் சாராயமோ? காய்ச்சிய
சாராயமோ? மக்கள் உயிரை மாயத்திடக் கூடாதென்று... நம்ம அரசாங்கமே நல்ல அக்கறையுடன்
நல்ல சரக்குகளை நியாய விலையில் விற்றிட
குடி’மக்கள் குறை தீர்க்க வந்த டாஸ்மாக் கடையே போற்றி!
*******************************
காணொளி-tasmac anthem
Thanks-YouTube-Published on Jun 9, 2012 by madhubaanakadai
அனைத்து
மதங்களிலும் ஆண்டவனின் உறைவிடங்கள் பழுதடைந்து
போகிறது போய்கொண்டிருக்கிறது
அனைத்து
மதங்களிலும் ஆண்டவனின்
தூதுவர்கள் அழிந்துகொண்டிருக்கிரார்கள்
அவர்களின்
அபயக்குரல் கேட்க்கின்றது
அறிவியல் இங்கே ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது
எத்தர்கள் இங்கே அறிவியலிலும் ஆண்டவனை ஒழித்துவைக்க முயலுகிறார்கள் கடவுள் துகள்தான்
அதன் ஆரம்பம்....
எத்தனை நாள்தான் இப்படி
செய்வார்கள்?
இனி வரும்
தலைமுறை இறையாண்மையை இல்லாமல்
செய்துவிடும்
திரும்பி பார்............
உன் மகனிடமே மாற்றம் தெரியும்
அவன் மகனிடம் அதைவிட பெரிய அறிவு இருக்கும் .................................... ............................... இப்படியே போகும் இனிவரும் தலைமுறை
இறைவனை இல்லாமல்
செய்துவிடும்
கடவுளின்
பிரதிநிதிகளாக கயமைத்தனம்
செய்வோரே கடவுளை காணாமல்
செய்வார்!
மதத்தின் பெயரால்
வன்முறை செய்வோரே
மதத்தை அழித்துச்
செல்வார்!
பணக்காரர்
ஏழை என்ற
பேதம் இல்லாமல் இந்தப்
பேய்களின் தொல்லையே!
பனைமரத்திலிருந்து
பிய்ந்து
கீழே விழும் சில்லாட்டைகள்
தெரியும் நள்ளிரவில் நிலவொளியில் பறந்து
வரும் பேய்போல....... சில்லாட்டையாவது
சல்லடையாக
உதவும் ஆனால் காமவெறியுடனும்
கொலைவெறியுடனும்
பறந்து
திரியும் இந்த
சில்லாட்டை பேய்களோ சமுதாயத்தை
சீரழிக்கும்
சட்டங்களை
திருத்த வேண்டும் சீரழியும்
சமுதாயத்தை சீர்தூக்கி
நிமிர்த்திடவே கொடுமை செய்யும் இப்பேய்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் (சில்லாட்டை= பன்னாடை) ************************************ காணொளி-SOCIAL ILLICIT.....