div style="background:url (http://cdn.oddstuffmagazine.com/wp-content/uploads/2012/11/mug_of_beer1.jpg)no-repeat;">
எச்சரிக்கை- குடி குடியைக் கெடுக்கும்! குடிப்பழக்கம்
உடல் நலத்தைக் கெடுக்கும்!
(இது மதுபானம்
பற்றிய கவிதை அதனால்தான் இந்த
எச்சரிக்கை... இது 18+ பதிவாகவும் இருக்கலாம்)
சுவர்க்கத்தின்
கதவுகள் திறந்து
இருக்கின்றன மலர்களின் தேனை அருந்தி
மகிழுங்கள்... பறந்து
செல்லுங்கள் சுவர்க்கத்தின்
கதவுகள் திறந்து
இருக்கின்றன பாடுங்கள்
குயில்களே! சோகத்தின்
சுவடுகள் அழிந்துப்போகட்டும்....
வசந்த வாழ்வின் இன்ப மணிகள் சிதறிக்கிடக்கின்றன
சிட்டுக்குருவிகளே! சோம்பிக்கிடக்காமல்
பொறுக்கிச்
செல்லுங்கள்...
சீக்கிரம்
வாருங்கள்! சிங்கக்குட்டிகளே... இந்த நாட்டின் எதிர்கால ஏந்தல்களே...! நீங்கள்
அருந்தும்போது...
நாளை- அகராதியில் அதன் பெயர்
நழுவலா...?
மழுப்பலா..? அல்லது நம்பிக்கையின் விதையா? ஆகட்டும் பார்க்கலாம்! (கர்மவீரரின் மாமந்திரம்)
இன்று முடியாதது நானை நடந்திடுமா? இன்று போன
சூரியன் நாளை வரவில்லை எனில்
என்ன செய்வது.....? யாரிடம்
முறையிடுவது..?
தினம்தோறும் நினைத்துப்
பார்க்கும் மந்திர
வார்த்தை... ‘நாளைக்காவது அதிகாலையில்
எழுந்து நடை பயிற்சி
போகவேண்டும்.’
நகரும் வாழ்க்கை மரத்தடியில் மல்லாக்கப்
படுத்திருக்கும் பரதேசியின்
பகல்கனவு... ‘அமைச்சரே! மாதம் மும்மாரி மழை பெய்கிறதா...?’
தெருவில் நிசப்தம் மதக்கலவரம் மறைந்ததா..? சாதிக்கலவரம் செத்ததா..? ஒ...ஊரடங்கு
உத்தரவா..? நாளை இது
தீருமா..? இல்லை இன்னும்
வருமா வேறு பெயரில் வேதனை..?
நிழல் போல்
தொடரும் மரணத்தின்
சாயல்... நினைத்துப்
பார்ப்பதில்லை நாளை வருமா...மரணம்? கடவுளிடம் கேட்டு
தள்ளிப்
போடமுடியுமா? மருத்துவரை
பார்த்து மாத்திரை
விழுங்கனுமா..?
எரியூட்டினால் பீனிக்ஸ் போல எழுந்து
வருமா.....? புதைத்தால் பீறிட்டு
முளைக்குமா...?
இன்னும்
எழுதப்படாத இதயத்தில் இருக்கும்
இந்த வார்த்தைகள்......
அவநம்பிக்கையை அகற்றி விட்டு தன்னம்பிக்கையை சுவாசித்துக்கொண்டு...
நிலாசூரியன்
Link-http://www.nilasuriyan.blogspot.in தமிழ் பற்று கொண்ட சமுக ஆர்வலர் கவிஞர்,கட்டுரையாளர்,எழுத்தாளர், வலைதளங்களில் கவிதைத்திருவிழா நடத்தி பரிசளிப்பவர் ...பண்பாளார்.
மூடநம்பிக்கை
முக்காடு
போட்டு சுடுகாடு
போனது... இன்னும்
வரும் எழுச்சி! இளைய
தலைமுறை புரட்சி! இந்த
மாற்றத்துக்கு காணாமல்
போன கயமைத்தனம்
கொண்ட கடவுள்
பிரதிநிதிகளே சாட்சி!
இந்த
மாற்றத்துக்கு அவர்களுக்கு
துணையாக அடக்குமுறையை
ஆளும்
ஆனவக்காரர்களே
சாட்சி!
இன்னும் காலம் வரும் மணலை கயிராகத் திரிக்கும் மந்திரவாதிகள் மறைந்துபோவார்...
-----------எப்படி பிரபலமாவது...?---------------- அனைவரையும் பிரபலமாக்கும் புகழ் அவர்களுக்குள்ளே இருக்கிறது
15
நிமிடங்களுக்கு மேல் அது நிலைப்பதில்லை... ஆன்டி
வரோலினின் இக்கூற்று உண்மையோ..?
இல்லையோ...? கிடைத்தப்
புகழை தங்க
வைத்துக்கொள்வோரே.. பிரபலமானவர்களாக
அங்கீகரிக்கப்படுகிறார்கள்....
முன்னொரு
காலத்தில் மக்களுக்கு
நன்மை செய்தவர்கள் பிரபலமானவர்களாக
இருந்தார்கள் இந்தக்
காலத்தில்.. வழக்கமாகச்
செய்திகளில் நல்லபடியோ
கெட்டபடியோ பேசப்படுபவர்கள்
பிரபலங்களாக.... அந்த
வேலையைச் செய்வது ஊடகங்கள்
பிரபாலங்களை
உருவாக்குவதில் விளையாட்டு-சினிமா-அரசியல்
போட்டோ
போட்டி... பணமும்
சூதும் உள்ளவர்கள் குறுகிய
காலத்தில் பிரபலமாகிறார்கள்
தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்பவர்கள் நிரந்திர ஏ-கிரேடு பிரபலங்கள் தன் வீட்டுக்கும் தன் மக்களுக்கும் நல்லது செய்பவர்கள் பி-கிரேடு
பி-கிரேடு
பிரபலங்கள்... அதை
நிலைநாட்ட கேடுகெட்ட
காரியங்கள் செய்து இருந்தப்
புகழும் இல்லாமல் போவர்.
அய்யன்
வள்ளுவர் இரண்டடியில்.... தோன்றிற் புகழோடு
தோன்றுக அ·திலார் தோன்றலின்
தோன்றாமை நன்று தவறாகப்
புரிந்துகொண்ட சிலர் உயர் சாதி...? யில்
பிறந்ததாலே பிரபலங்கள் என்று
நினைக்கிறார்கள்.
இன்னும் இருக்கிறார்கள் இங்கே சில பிரபலங்கள்..... டாஸ்மாக் உள்ளே போகும்போது சாதாரன குடிமகன்கள்.. டாஸ்மாக் வெளியே வரும்போது பிரபல கவிஞர்கள்...! பிரபல பாடகர்கள்....! பிரபல நடிகர்கள்.....! பிரபல தத்துவஞானிகள்...! பிரபல பிஸ்த்தாக்கள்..! இவர்கள் எந்த கிரேடு பிரபலங்களோ...?
விருந்து உபசரிப்புகள் ,நண்பர்களின் மகிழ்சியை பகிர ஆரம்பிக்கும் உற்சாக
பானம் பீர்லில் தொடங்கி கடைசியில் பிராந்தி ,விஸ்கி முடிகிறது.மனிதன்
எதையுமே பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் அதுவே பழக்கமாக மாறிவிடுகிறது
.கவலையை மறக்க ஆரம்பிக்கும் குடி பின் பழக்கமாக
மாறிவிடுகிறது.குடிகாரர்களின் நண்பர்கள் வட்டமும் அப்படியே அமைந்து
இருக்கும்..............மேலும்.