பாருக்குள்ளே நல்ல நாடுஎங்கள் பாரதநாடு!-மது
பார்கள் நிறைந்த நாடுஎங்கள் பைந்தமிழ்நாடு!
ஆனாலும் டாஸ்மாக்கோ
மொத்தமாய் விற்றுவிட்டு
மூணு நாளாய் மூடிக்கிடக்குது
அதைப்பார்த்து............
ஒரு குடி’மகன் புலம்பல்
அவரின் போதைப் புலம்பல்
"‘குடி’யரசு நாட்டில்
அதுவும் குடி(யரசு)தினத்தில்
குடிக்க முடியவில்லையே..."
செய்தி தொலைக்காட்சியில்
ஒரு ‘குடி’மகன் பேட்டி....
தினக்கூலி அவருக்கு நானூறு
தினம் அதில் குடிப்பதற்கு இருநூறு
மூன்று நாளைக்கு ஆறுநூறு
மொத்தமாக வாங்க வழியில்லை
அதுவே அவருடைய அவதூறு..
(வழியில்லாமல் அவர்
வழிப்பறியில் இறங்கிடுவார்
என்று நானும் சொல்லவில்லை)
தலைவர்களின்
மறைந்த நாள் பிறந்தநாள்
மதுக்கடைகள் திறந்திருந்தால்
மரியாதையில்லை அவர்களுக்கு
காந்திஜெயந்தி அன்று குடித்தால்
காந்திஜிக்குத்தான் கோபம் வராதா...?
கைத்தடியால் அடிவிழாதா....?
மதப் பண்டிகை நாட்களில்
மதுக்கடைகள் திறந்திருந்தால்
கடவுளுக்குக் கோபம் வராதா...?
கலவர மதுப்பண்டிகை ஆகிவிடாதா...?
சுதந்திர தினம் குடியரசு தினம்
இப்படித் தேசிய திருநாட்களில்
மதுக்கடைகள் திறந்திருந்தால்....
மதிகெட்டு போய்விடாதா....?
தேசபற்று தேய்ந்துவிடாதா....?
அதனால்தான் மதுக்கடைகளுக்கு
இனிவரும் காலங்களில்
காசு இல்லாதவர்கள்
கவலையில்லாமல் குடிக்க
கடன் அட்டை தருகிறோம்.
(யாராவது கடன் அடைக்காமல்
செத்துத் தொலைந்தால்
சும்மா விடமாட்டோம் பிணத்தை
மருத்துவப் படிப்புக்கு எடுத்து
ஆய்வு செய்ய வேண்டும்
எப்படிச் செத்தான் இவன் என்று....?)
மதுக்கடைகள் இல்லாத
இந்த மூன்று நாட்களும்
எந்தக் குடிமக்களும்
சென்னை மாநகரில்
ரோடுகளில் ஆட்டமில்லை...
கவி பாடும் தள்ளாட்டமில்லை
இந்த நாட்களில்
காவலர்களைக் கண்டால்
போட்ட போதையிறங்கி
பேயோட்டம் ஓடுகிறார்கள் ..
மற்ற நாட்களிலோ
காவலர்களிடமே
கட்டிங்-க்கு காசு கேட்பார்கள்
இது போன்ற வசந்த நாட்கள்
இனியும் தமிழகத்தில் தொடர.....
எல்லாம் வல்ல அம்மா அவர்கள்
ஏதேனும் செய்வார்களா....?
மது அருந்தும் பார்களையும்
மது அருந்தியவர்களின்
வெளி நடமாடத்தையும்
தடை செய்தால் போதுமே!
பாதி குற்றங்கள் குறையுமே!
அதுவே
அம்மாவின் புகழுக்கு
நீங்கா மகுடம் சூட்டுமே!
....................பரிதி.முத்துராசன்
**************************************************************
(யோவ்...பரிதி! எச்சரிக்கை வாசகம் வைக்கவில்லை! ..உனக்கு நேரம் சரியில்லை!)
எச்சரிக்கை-
குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்
இது யதார்த்தமான பதிவே! எந்த நாட்டையும் எந்த அரசையும் எந்த 'குடி'மகனையும் புண்படுத்தும் நோக்கமல்ல!
***************************************************************
உங்கள் பார்வையில்..............
மது அருந்தும் பார்கள் தமிழ் நாட்டுக்கு தேவையா......?
****************************************************************
கருத்துக்கணிப்பு முடிவு ......
அரசு மலிவு விலை ஓட்டல்கள்:அம்மா அம்மாதான்!
அரசு டிபன்-சென்டர் பற்றிய உங்கள் கருத்து...?
நல்ல திட்டம்
|
77
(79%)
|
சரிவராது
|
10
(10%)
|
சுயநலமானது
|
10
(10%)
|
இப்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு வலைதளங்களில் நல்லதிட்டம் என்று அதிக வாக்குகள் பெற்றுள்ளது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி
********************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து...................?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |