google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குட்கா தடை-அம்மா வழி அறவழி...?

Saturday, May 11, 2013

குட்கா தடை-அம்மா வழி அறவழி...?

freeonlinephotoeditor  
அறவழி செல்வோருக்கு
எவ்வலியும் வராது.
புகையிலை வழி
போவோருக்கு... 
புற்றுநோய் வலியில் 
இற்றுதான் போவார்கள்  
இங்கே அந்த குறையும்
இனிமேல் இல்லை 

freeonlinephotoeditor  
அம்மா....
புகையிலைக்கு
அறம் பாட...
ஆரோக்கியம்
ஆரம்பமானது.
நேற்று
சாதிவெறிக்கு
சங்கு ஊதினார்

freeonlinephotoeditor

இன்று
புகையிலை அரக்கனை
புதைக்கத் துணிந்தார் 
இனி குட்காவுக்கு
இங்கே இறுதியாத்திரை
பான்பராக்குக்கு
பாடை கட்டியாச்சு....

http://www.koreahealthlog.com/attach/1/hk8.jpg

நாளை
மதுவிற்பனைக்கும்
மண் அள்ளிப்போட்டால்...
அம்மா வழி அறவழி  
அய்யன் காட்டிய  குறள்வழி 

freeonlinephotoeditor
கவிதை தந்த குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
சாலமன் பாப்பையா உரை:
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்     


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1