google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குட்டிப்புலி-சினிமா பட்டிமன்றம்

Saturday, June 01, 2013

குட்டிப்புலி-சினிமா பட்டிமன்றம்

freeonlinephotoeditor  

திண்டுக்கல் லியோனி-
அனைவருக்கும் எனது அன்பு வணக்கம் இப்பல்லாம் பட்டிமன்றம்னா நாங்க நாலு பேருதான் பேசிக்கிட்டு இருக்கவேண்டியிருக்கு...சினிமா பட்டிமன்றம்னாதான் கூடுறாயிங்க ..இங்கே எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தலைப்பு குட்டிப்புலி- பாயும் புலியா? பதுங்கும் புலியா? இப்பல்லாம் சினிமா படம் தியேட்டர்ல வருவதற்கு முன்னால விமர்சனம் எழுதிப்புடுறாயிங்க முந்திலாம் வாரப்பத்திரிகையில மட்டும்தான் விமர்சனம் வந்துக்கிட்டு இருந்திச்சு...அப்புறம் இணையத்தில வத்துச்சு..இப்ப என்னடானா  பேஸ் புக்ல கூட விமர்சனம் அதாவது பரவாயில்ல ட்வீட்டேர்லயும் எழுத ஆரம்பிச்சிட்டாயிங்க 140 வார்த்தைகூட எழுதாம...ஒரே வார்த்தையில மொக்க என்கிறாயிங்க...எதுஎதற்கோ புடிச்சி உள்ளப் போடுறாயிங்க..இவிங்கள யாரும் ஒன்னும் பண்ணுறதில்ல..அவ்வ



இங்க குட்டிப்புலி-பாயும் புலியேனு நம்ம மாட்டுத்தாவணி மாயாண்டி பேசுவாரு...இல்ல அது பதுங்கும் புலினு அரசரடி மொக்கையன் பேச வந்திருக்காரு...ஆங்..ஆரம்பிங்கப்பா...

http://tamilcinemanews.hosuronline.com/pictures/vadivelu-come-back.jpg

மாட்டுத்தாவணி மாயாண்டி -  
நடுவர் அவர்களே..இந்த குட்டிப்புலி பாவம் என்ன பாவம் பண்ணிச்சோ,,இப்படி காலுவேற கைவேற பிச்சி புடுங்குராயிங்க....அதிலும் இந்தப் பதிவர் இருக்கிராயிங்களே..ஒருத்தரு ஆகா..ஓகோ..னு எழுதுறாரு...இன்னொருத்தரு ஊத்திக்கிச்னு எழுதுறாரு...ஒருத்தரு எழுதுறாருப்பா....தியேட்டரே காலியா கிடந்துச்சுன்னு.. ஆமாம்..வெள்ளிக்கிழமைதான் புதுப்படம் போடுவாயிங்க குட்டிப்புலி என்னவோ முந்திக்கிட்டு வியாழக்கிழமையே பாஞ்சி சென்னையில மட்டும் தியேட்டருக்கு வந்திருச்சி...அது நிறையப் பேருக்கு தெரியாம  போச்சு...அப்புறம் தெரிஞ்சப்ப தியேட்டரே நெம்பிப்போச்சப்பா...

இன்னொருத்தரு எழுதுறாரு படம் புல்லா ரத்தக்களரியா இருக்குனு...நல்ல கதையை இப்படிச் சொதப்பிட்டிங்களே...அப்படின்னு ஒருத்தர் பாவம் வருத்தப்படுறாரு..ஆமா..மதுரக்கார தம்பிகளைப் பத்தி படமெடுத்தா அப்படித்தான் இருக்கும் அப்புறம் புலியினு பேர வச்சிக்கிட்டு மான் மாதிரியா துள்ள முடியும் ..அதுக்குத்தான் சூப்பரா லட்சுமி மேனன படத்துல காட்டுரமுல...

http://4.bp.blogspot.com/-OQrh70qevlY/TqfF7Uxdl-I/AAAAAAAAJAM/ZXLaqFaRIws/s1600/Leoni+Patrimandram-kalaignar+tv-diwali+spl.jpg

திண்டுக்கல் லியோனி-
இந்தப் பட்டிமன்றத்துக்கு வரும்போதே வாசல்ல  இரண்டு பெருசுக வழிமறிச்சு ...ஏம்பா நீ மட்டும்தான் வந்தியா லட்சுமி மேனனைக் கூட்டி வரலியானு கேட்டப்பவே  நினைச்சேன்...படத்தில்தான் பெருசுகளும் சிறுசுகளும் ஜொள்ளுராயிங்கனா நேர்லயும் இப்படித்தான் ..இதுதான் சினிமா குட்டிப்புலிக்கு படத்திலையும் எதிரிகள் நிறைய விமர்சனங்கள் எழுதுறவங்களும் எதிரியாய் எழுதுராயிங்க நடுநிலையோடு எழுதுராயிங்களா அதுவும் இல்ல...ப்..பே..பேய்..னு நாலு படம் ஓடிச்சுனா அவிங்க நேரம் நல்லாயிருக்குன்னு அர்த்தம் அதுக்காகக் குட்டிப்புலியும் ப்..பே..பே...னு சொன்னா நல்லாயிருக்குமா..?. புலினா...உறுமத்தான் செய்யும்...மதுரப் பக்கம்லாம் இப்படித்தான் வாழ்றாயிங்க சங்கு அறுப்பது அங்கொன்றும் புதுசு அல்ல  அதன் பிரதிபலிப்புத்தான் இயக்குனர் முத்தையாவின் குட்டிப்புலி....சாதியையும் சாதி சார்ந்த இடமும் ...சரி அரசரடி மொக்கையன்...நீங்க அவுத்துவிடுங்க.

http://i4.ytimg.com/vi/sPALMKi-wgk/hqdefault.jpg

அரசரடி மொக்கையன்-
அய்யா..நடுவர் அவர்களே! நானும் சசிகுமார் ரசிகன்தான் அதுக்காக இப்படி அவரு நடிக்கிற படமெல்லாம் கம்பும் அருவாளும் தூக்கிக்கிட்டு லுங்கிய மடிச்சிக்கட்டிக்கிட்டே வந்தா...எப்ப அவரு பெரிய சூப்பர் ஸ்டார் ஆவுறது...அந்த ஆதங்கத்திலத்தான் அய்யா சொல்லுறேன்...இப்ப காலத்துக்கு ஏத்தமாதிரி துப்பாக்கி தூக்கிகிட்டு புலி வந்தா எப்படியிருக்கும்... சும்மாங்காட்டியும் நடு ரோட்டுல கம்பு சுத்துறாயிங்க....  அவருகிட்ட லட்டு...ச்சே..லட்சுமி  மேனன் ஐ லவ் யு ...னு பாவம் பாப்பா வாயத்திறக்குது...அதுக்குள்ள் குட்டிப்புலிய சாவுஅடி அடின்னு அடிச்சுப்புட்டு இடவேளையிங்கிறாய்ங்க...அப்புறம் அவரும் திமுசுக்கட்ட  மாதிரி வருறாரு..சண்ட போடுறாரு...ஆனா கிளைமாக்ஸ்ல வில்லனக் கொலை செய்றது மட்டும் இரண்டு  பொம்பளைக...அப்புறம் இவரு எதுக்குப் புலினு பேரவச்சிக்கிட்டு...இந்த காலத்திலஅவனவன் ஆத்தா அப்பன ஆடு மாடு மாதிரி காபபகத்தில அடைக்கிறாயிங்க..இந்த இயக்குனரு முத்தையா என்னடானா...  சாமி ...குலதெய்வம் என்கிறாரு..நடுவர் அய்யா நீங்கதான் நல்ல தீர்ப்பு சொல்லணும் 

http://img.youtube.com/vi/vLFzVspccDk/0.jpg

திண்டுக்கல் லியோனி-
அவிங்க அம்புட்டுச் செலவு பண்ணி படம் எடுக்கிறாயிங்க..அம்பதோ நூறோ கொடுத்து பார்த்துப்புட்டு  இவிங்க பண்ணுற பவுசு தாங்க முடியல...இனிமே சினிமானாவுல நடிகர்கள்  யாரும் நடிக்காம.அப்படியே வீட்டுல இருந்து எழுந்து வந்து   ஊத்த வாயோட கேமரா முன்னாடி நின்னுட்டுப் போனாங்கனா ..அப்பு ..ஆகா...ஓகோ...சூப்பரு என்கிறாயிங்க...யதார்த்தம் என்கிறாயிங்க 
(அப்புறம் இவிங்க இரண்டு பேரும் பட்டிமன்றத்துக்குப் பேச வரும்போது கையில அருவாளோடத்தான் வந்திருக்கிறாயிங்க...எப்படி தீர்ப்பு சொன்னாலும் நம்மல போட்டுருவாயிங்களோ.. சரி பல்டி அடிச்சிடவேண்டியதுதான்) நம்ம மாயாண்டி அண்ணனும் மொக்க அண்ணனும் பேசுனதக் கேட்டா...எதுக்கும் இன்னொருவாட்டி குட்டிப்புலிய பார்த்துட்டு வந்து தீர்ப்பு  சொல்லுறேங்க...அதுக்குள்ள் மக்கா...நீங்களும் போய்க் குட்டிப்புலிய குசலம் விசாரிச்சிட்டு வந்துடுங்க 

(குறிப்பு-இது ஒரு நகைச்சுவை கற்பனைப் பதிவு...உண்மையான நிகழ்வு அல்ல ....நன்றி)





விரைவில்..........

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-prn1/s720x720/535484_10151410698424368_177941167_n.jpg




http://www.netanimations.net/animated_lion_made_of_fire.gif
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1