google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மணிவண்ணன்-கோபுரம் சாய்வதில்லை

Saturday, June 15, 2013

மணிவண்ணன்-கோபுரம் சாய்வதில்லை

freeonlinephotoeditor  

கோபுரம் சாய்வதில்லை!
ஆலமரம் அழிவதில்லை! 
அலைகள் ஓய்வதில்லை! 
அப்படித்தான் 
அய்யா மணிவண்ணனே....
எங்கள் மணி அண்ணனே! 
உமக்கும் மரணமில்லை...

நடிகவேளுக்குப் பிறகு 
நடிப்பாலும் 
திரைக்கதை எழுத்தாலும் 
திரை இயக்கத்தாலும் 
அரசியலை 
நக்கலும் விக்கலுமாய் 
நையாண்டித்தனங்கள் செய்து...
அதன் இன்னொரு முகத்தை 
இவ்வுலகுக்கு காட்டியவரே!

அமைதிப்படையில்....
அலட்டல் அரசியல்வாதியாக 
முதல்வனில்....
கூட இருந்தே குழி பறிக்கும் 
முதல்வரின்  உதவியாளராக..
இன்னும் இது போல் 
உமது அரசியல் 
நையாண்டித்தனங்கள்
சமுதாயத்தில் 
சங்கடங்களை விதைத்தது...
சமுதாய அவலங்களை 
சந்தி சிரிக்கச் செய்தது....

உமது பிறவிக்குணம்
வெளிப்படையாக பேசும் 
வெள்ளேந்தி உள்ளம்...
அதுவே 
அரசியல்வாதிகளையும் 
சினிமாவாதிகளையும் 
சில நேரங்களில் 
சீண்டிப்பார்க்கும்...
அதுவே 
உம்மையும் 
தண்டிக்கப்பார்க்கும் 

ஆனாலும்...
புறமுதுகு காட்டாதவர் 
நிஜத்தில் 
நாக்கு பிறழாதவர்... 

சமூகப்போராளியாய் 
உமது பேச்சும் மூச்சும் 
தமிழீழம் மட்டுமே  
சமுதாய விடுதலைக்கு 
புலியாய் பாய்ந்தவரே!

நிஜத்திலும் 
நிழல் திரையிலும் 
எதிலும் அஞ்சா நெஞ்சம் 

உம்மால் 
சினிமாத்துறையில் 
வாழ்ந்தவர்கள் ஏராளம்...
வீழ்ந்தவர் எவருமில்லை  

கோபுரம் சாய்வதில்லை!
ஆலமரம் அழிவதில்லை! 
அலைகள் ஓய்வதில்லை!  
அப்படித்தான் 
அய்யா மணிவண்ணனே....
எங்கள் மணி அண்ணனே! 
உமக்கும் மரணமில்லை...

உமது செல்லுலாய்டு  சிற்பங்கள் 
காலத்தால் அழியாதது...
உமது நையாண்டித்தனங்கள்
எமலோகத்திலும் 
எதிரொலிக்க...
எம்மை விட்டுப் போனாயோ..? 

               ............பரிதி.முத்துராசன்  
 
 
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1