(தீர்ப்பு-தொலைகாட்சியில் தொடராக வரவேண்டியதை திரையரங்கில் படமாகப் போட்டு..சொன்னா புரியாது என்றால்...அடங்..கொய்யால அப்புறம் எதுக்குச் சொன்ன..?.)
பத்துப் படங்களுக்கு மேல் நடித்துள்ள மிர்ச்சி சிவா இதுவரை எந்த அவார்டும் வாங்கவில்லை ஆனால் இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டால் நிச்சயம் பத்து விருதுகள் வாங்கிவரும்...
எப்படி...? என்று கேட்டால் அதுவும் உங்களுக்குச் சொன்னா புரியாது.
(படுக்கையிலிருந்து விழிக்கும் போதும் சிரித்துக் கொண்டே விழிக்கும் நடிகர் உலகிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்...?.
மேலும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்கள்...டைட்டானிக், ஹாரி பாட்டர் போன்ற படங்களில் நடித்தவர்களைக் கேலியும் கிண்டலும் செய்யும் அளவுக்குப் பெரிய நடிகர் )
கதை என்ன என்று கேட்டால்...? அதுவும் உங்களுக்குச் சொன்னா புரியாது.நீங்கள் இதயப் பூர்வமாக உணரவேண்டும்.....வோல்ஸ் வேகன் கார் கனவு லட்சியத்தில் குடியும் கும்மாளமாகத் திரியும் டப்பிங் ஆர்டிஸ்ட் சிவா திருமனமானால் தன் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று மறுக்கும் அவருக்கு அவரது அம்மா மீரா கிருஷ்ணன் அஞ்சலி (வசுந்தரா) என்ற (சிவாவைப் போல்) குடியும் கும்மாளமாக அலையும் அழகி....?-யுடன் கால்கட்டு.காம் கல்யாண புரோக்கர் மனோபாலா மூலம் நிச்சயம் செய்ய.........இருவரும் திருமணத்தை நிறுத்தத் செய்யும் கோல்மால் காட்சிகளாகப் படம் சொல்கிறது....அவர்கள் திருமணம் நடந்ததா...? சிவாவின் வோல்ஸ்வேகன் கார் கனவுப் பலித்ததா...? என்பதே கதை
படம் முழுக்கச் சிவா மட்டுமே....சென்னை-28 க்குப் பிறகு கொஞ்சம் நடிப்பது..? போல் லைட் வெய்ட் கதை...இவரும் லைட் வெய்ட் நடிகர் எதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டது போல் தெரியவில்லை நடிப்பையும்தான்...சைனீஸ் படங்களுக்கும் ஜாக்கிசானுக்கும் டிஸ்கவரி சானெல் குரங்குகளுக்கும் டப்பிங் கொடுக்கும் காட்சியில் நல்ல நடிப்பு..(இதில என்ன நடிப்பு வேண்டியிருக்கு என்று நீங்கள் கேட்பது...உங்களுக்குச் சொன்னா புரியாது..)
அஞ்சலியாக நடித்துள்ள வசுந்தரா காஷ்யப் இரு வேறு மாறுபாட்ட நடிப்பு அடக்கமான பெண்ணாகவும் பார்களில் குடித்துக் கும்மாளமிடும் அழகியாகவும் என்று அடடா...நாம் பார்ப்பது தமிழ் படமா? அல்லது ஆங்கிலப் படமா? என்று..அதுவும் உங்களுக்குச் சொன்னா புரியாது.
மீரா கிருஷ்ணன் அவ்வப்போது பாதயாத்திரை செல்ல சாமியாரிணி ஆடைமாற்றுவதும் நல்ல காமெடி..சிவாவின் பாட்டியாக வத்சலா ராஜகோபால் நிறையக் காட்சிகளில் ஐ-போனுடன் FBI (FACEBOOK ID) பற்றிப் பேசி கலக்குகிறார்...அதெல்லாம் சொன்னா புரியாது.
கால்கட்டு.காம் அதிபர் மனோபாலா செம கூத்து...கங்கை அமரனுடன் ரியாலிட்டி ஷோவில் சிவா-அஞ்சலி ஜோடியுடன் அலப்பறை பண்ணுகிறார்.(சிவா-அஞ்சலி கல்யாணமாகப் போகும் ஜோடி..மனோபாலாவும் அவரது மனைவியும் எந்த ஜோடியோ..?
இதில் வேற கூத்து...ரியாலிட்டி ஷோ நடத்துபவரே மனோபாலாவாம்...அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது.)
சிவாவின் நண்பர் கல்யாண வீட்டில் ஊர் நாட்டாமையாக வரும் சிங்கமுத்து கொஞ்ச நேரமே என்றாலும் பரவாயில்லை..மற்றபடி சிவாவே கதாநாயகன்+காமெடி+வில்லன்+....+...இப்படி அனைத்தையும் அவரே செய்வதால் என்னத்த நான் சொல்வது...? சொன்னாலும் புரியாது
இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் ...காமெடி தீயா வேலை செய்திருக்கிறாரு ..ஆனால் சிரிப்புத்தான் வரமாட்டேங்குது....
இப்படிக் குத்துப்பாட்டும் கொலைவெறி டான்சும் அதிரடியும் என்று எந்தச் சினிமாத்தனங்களும் இல்லாத இதைச் சினிமா என்று சொன்ன உம்மைப் பாராட்ட வேண்டும் நீங்க நல்லா வருவீங்க..இங்க அல்ல சின்னத்திரையில....இப்படி கதம்பமாக உங்களுக்குச் சிரிப்பு வரும் காட்சிகளைக் கோர்த்து நல்லாவே சொரியுரிங்க...அப்புடியே மறந்திடாதீங்க...
உங்க படத்தை (உங்க வார்த்தையில் சொன்னா...இது படமல்ல பாடம்) ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்ய மறந்திடாதீங்க..உங்களுக்கு சொன்னா புரியாது...அவிங்களும் சொரிஞ்சி சொரியாசிஸ் வந்து சிரிக்கட்டும்..இல்லனா சாகட்டும் அப்படியே ஹாலிவுட்ல நீங்க ஒரு பெரிய இயக்குனராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்
(ஏன்...? என்று கேட்காதீங்க அப்படியாவது தமிழன் பிழைத்துப் போகட்டும் என்னடா...இந்த தமிழனுக்கு வந்த சோதனை..அண்டை நாட்டிலும் அவஸ்தை..நடுக்கடலிலும் உயிர எடுக்கிறாயிங்க...சொந்த நாட்டிலயும் இப்படிச் சொரியிராயிங்க..ஒரு சினிமா கூட ஒழுங்கா பார்க்க விடமாட்டேங்கிராயிங்க... .இதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது. ...அடங்..கொய்யால- என்ற வார்த்தைகூட...உங்க படத்து வசனம்தான்...நல்லா குடிப்பாயிங்க அப்புறம் கொய்யா பழம் தின்னா வாட அடிக்காதாம்...அந்தக் கொய்யாவத்தான் சொன்னேங்க )
**************************************************************************
இது கவர்ச்சி பக்கம்..........
இது கவர்ச்சி பக்கம்..........