பேர்,புகழ் போதையில் அரசியல் வெறியுடன் ஒரு மனிதன் எப்படி கொலை,கொள்ளை செய்யும் மனித மிருகமாய் மாறுகிறான் என்பதை....
ரவுடி-போலிஸ் கதையில் அண்ணன்-தம்பி குடும்ப சென்டிமென்ட் கலந்து வன்முறை இல்லாமல் இயக்குனர் சுசிந்திரன் அதிரடி பொழுது போக்கு படம் காட்டுவதே.......பாயும் புலி
படத்தின் கதையாக.......
மதுரையில் கொலை,கொள்ளை,ஆள் கடத்தல் ஈடுபடும் பவானி என்ற அதிபயங்கர ரவுடியும் அவனது கூட்டாளிகள் வெட்டு ராஜா,மகா பிரபு ஒரு போலிஸ் அதிகாரியை கொலை செய்துவிட.....
அவர்களை ரகசியமாக புலிபோல் பாய்ந்து பாய்ந்து என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார் ACP ஜெயசீலன் (விஷால்)
ஆனாலும் கொலை,கொள்ளை, ஆள்கடத்தல் தொடர்ந்திட.....
உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து பாசத்துக்கு இடம்கொடுக்காமல் ACP ஜெயசீலன் தன் போலிஸ் கடமையை செய்வதே
முன்பாதியில் ரவுடிகளை போலிஸ் போட்டு தள்ளும் காட்சிகளுடன் பாயும் புலியாக விறுவிறுப்புடன் நகரும் கதை...
பின் பாதியில் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளால் தள்ளாடி நொண்டிப் புலியானது
ஆனாலும்....
இயக்குனர் சுசிந்திரன் வன்முறை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பார்வையாளர்களின் பாராட்டை பெறுகிறார்
விஷால்......ரகசிய போலிசாக ரவுடிகளை அடித்து நொறுக்குவதிலும் காஜலுடன் ஆட்டம் பாட்டம் என்றும் அமர்க்களம் செய்கிறார்
காஜல்.......கொஞ்சம் காதலும் காமெடியும் செய்துவிட்டு அழகாக இரண்டு பாடல்களில் ஆட்டம் போட்டு விட்டு காணாமல் போகிறார்
போலீஸாக வரும் சூரி..... தண்ணி போட்டு விட்டு பொண்டாட்டி கிட்ட மாட்டி அடிவாங்கும் மொக்கை ஆனாலும் சிரிக்கும் படி காமெடி செய்கிறார்
சமுத்திரக்கனி.....குடும்பப் பாங்கான வில்லனாக அவதாரம் எடுத்து மிரட்டுகிறார் தொழில் அதிபராக ஜெயபிரகாஷ், போலிஸ் அதிகாரிகளாக ஆனந்த் ராஜ்,அருள்தாஸ்....நடித்துள்ளனர்
D.இமான் இசையில்.....வைரமுத்து வார்த்தைகளில் மதுரைக்காரி....., சிலுக்கு மரமே....பாடல்கள் ரசிக்கும்படியும் ஆட்டம் ருசிக்கும்படியும் உள்ளன
வேல்ராஜ் ஒளிப்பதிவில்.....இருளில் நடக்கும் ஆள் கடத்தல் கொலைக்காட்சிகள் ,சண்டைக்காட்சிகள் அருமை
ஆக மொத்தத்தில்.........
முன்பாதியில் போலிஸ்-ரவுடி கதையுடன் பாயும் புலி....
பின்பாதியில் அண்ணன்-தம்பி செண்டிமெண்ட்வுடன் அவ்வப்போது ரெஸ்ட் எடுத்துக் கொண்டு....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |