நீ
தினந்தோறும்
தின்னத் தின்ன திகட்டாத
புதுப் புது சுவை தரும்
வேர்பழாச்சுளை!
நீ
தினந்தோறும்
படிக்கப் படிக்க
புதுப் புது அர்த்தங்கள் தரும்
கம்பனின் காவியம்!
நீ
தினந்தோறும்
புதுப் புது ராகங்கள்
புறப்பட்டு வரும்
புல்லாங்குழல்!
நீ
தினந்தோறும்
விதவிதமான
பூக்கள் மலரும்
விசித்திர பூஞ்செடி!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |