பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் முகாம்களில் தீவிரவாத பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன .............. உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே
நல்லாவே சிண்டு முடித்துவைத்தார் ஷிண்டே ...சண்டை ...தேர்தல் காலங்களில் நடக்கும் வாய்சண்டை ஆரம்பமாகிவிட்டது
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள்......மதக்கலவரம்,பாலியல் வன்கொடுமைகள்,ஊழல் பெருச்சாளிகள்
இப்படி நாடு இங்கே நலிந்துக்கொண்டு போகிறது
இவைகளை சீர்படுத்த இங்கே இல்லை அரசியல் கட்சிகள்
ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் ஒருவரை ஒருவர் சீண்டுவதும் தீண்டுவதும் வன்முறைக்கு தூண்டுவதும் ...அட தமிழ்நாட்டில் நிறையவே பார்த்துவிட்டோம் இப்பொது வடநாட்டில்......
கவுண்டமணி சொல்வதுபோல்
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
ஊடகங்களுக்கும் மீடியாக்களுக்கு மெள்ள நல்ல அவல் கிடைச்சாச்சு
இது அரசியல்வாதிகளின் வீர விளையாட்டு...தேர்தல் ஜல்லிக்கட்டு
அதில் ஒன்றுதான் இந்த காவி பயங்கவாதம் என்ற ஷிண்டே -வின் சீண்டிவிடும் வார்த்தை விளையாட்டு.
பயங்கரவாதம் எந்த கலரில் இருந்தால் என்ன...? அவர்கள் பயங்கரவாதிகள் அவர்கள் அழிக்கப்படவேண்டும் அதை விடுத்து இப்படி தெருக் குழாயடி சண்டை போடுவது எந்தவகையில் நியாயம்?
இது பயங்கரவாதிகளுக்குத்தான் ஆதாயம்
.........பரிதி.முத்துராசன்
*****************************************************************************
எங்கே போகிறது நாடு...?என்ன நடக்கிறது நாட்டில்...?
(கவலைப்படாதே....மக்கா! ஒத்திகை நடக்கிறது
இவைகளிலிருந்து நாளை நாடு விடுதலை பெறுவதற்கு....!)
என்னது நாட்டுக்கு சுதந்திரம்
இன்னும் வரவில்லையா?
அப்ப ..காந்தி வாங்கித் தந்தது சுதந்திரமில்லையா...?
(அட..என்னாச்சு இவனுக்கு
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோமோ....?
இதெல்லாம் ஒரு பதிவுனு எழுதிக்கிட்டு
அட.....வேலையைப்பாருங்கப்பா.................. )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |