ஏல....அறிவுச்செல்வா...
எங்கல போய்த் தொலைஞ்சல....?
இப்பலாம் நான்தான்
ஏதும் கீச்சுரதுமில்ல பீச்சுரதுமில்ல
இப்ப ஏன்ல வீட்டு வாசல்ல கூட்டம்?
காவி பயங்கரவாதத்துக்கு ஆதரவும் சொல்லல எதிர்ப்பும் சொல்லல என்ன சொன்னேன்னு எனக்கே தெரியல அப்புறம் என்னல....?
திரிஷா சொன்னதயும்..ஆதரவும் சொல்லல எதிர்ப்பும் சொல்லல என்ன சொன்னேன்னு எனக்கே தெரியல அப்புறம் என்னல....?
விஸ்வரூபம் பிரச்சனையிலும்.ஆதரவும் சொல்லல எதிர்ப்பும் சொல்லல என்ன சொன்னேன்னு எனக்கே தெரியல அப்புறம் என்னல....?
(அண்ணேன்........அதுதான் பிரச்சனையே...
ஆதரவு சொன்னதாக ஒரு கூட்டம்..ம்ண்ணேன்
எதிர்ப்பு சொன்னதா ஒரு கூட்டம்...ம்ண்ணேன்
இதெல்லாம் விட பெரிய கூட்டம்...தமிழர் கூட்டம்
சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கத்தெரியாத இனம் தமிழ் இனமே. அது அறிவு வளர்ச்சியா? அறிவு வீழ்ச்சியா?
அப்படின்னு சொல்லிப்புட்டிங்களாமே....?
இப்ப என்ன..அண்ணேன் பண்ணலாம்....?
அவியிங்ககிட்டஎன்ன...அண்ணேன் சொல்லலாம்?)
இது என்னத்தல வம்பாப் போச்சு...
நானும் தமிழன்தான்...ல முத்தமிழன்....ல
நெல்லையிலப் பிறந்த நெல்லைத் தமிழன்.....ல..!
மதுரையில வளர்ந்த மதுரைத் தமிழன்...டா...!
இப்ப சென்னையில வாழ்ற சென்னைத்தமிழன்...தா!
அவங்ககிட்ட சொல்லுல
ஆகட்டும் பார்க்கலாமுன்னு சொல்லுல...
(ஆகட்டும் பார்க்கலாமா...?
அப்படினா என்ன.....அண்ணேன்?)
அட..சொங்கிப்பய மவனே..
அதுகூட தெரியாமல இருக்க
ஆகட்டும் பார்க்கலாம்னா
ஆமாமுனும் இல்ல இல்லனும் இல்ல
அப்படித்தான்ல நானும் நினைக்கிறேன்
அகராதியில்கூட அர்த்தம் இல்லல
அதுக்கு அப்பச்சிக்கிட்டத்தான் கேட்கனும்
அவரும் இப்ப இல்லல
(அண்ணேன்....புதுசா ஏதோ வண்டி வந்திருக்கு...ண்ணேன் நம்ம சீயான புடிச்சிட்டுப் போக சேது படத்தில கடைசில வருமே அந்த வண்டி மாதிரி இருக்கு..ண்ணேன்)
அடே...அவனுங்க மொட்ட போட்டு
இருக்கிற கொஞ்சம் அறிவையும்
இல்லாமப்பன்னிடுவாங்கடா.....
ஆடு..மாடு திங்குறமாதிரி...
இலை தளைதாண்டா தருவானுங்க..
பேசமா...புழல்ல கொண்டு போடச்சொல்லுடா
அங்க கறியும் சோறும் போடுறாங்களாம்...
img thanks-fun2video
படமோ...பதிவோ
இந்தக் குதிரப்பயவுள்ள கங்கணம் மாதிரி
தையக்க தக்கான்னு குதிச்சா..
பிரச்சனையே இல்ல...
பணத்துக்கு பணமும் பேருக்கு பேரும் சேரும்
அட...நானும் குதிச்சுத்தான் பாக்குறேன் ..
காலு சுளுக்குனதுதான் மிச்சம்
...............................பரிதி.முத்துராசன்
****************************************************************************
அன்பர்களே!நண்பர்களே! இதுவரை இலைமறைவாக இருந்த பதிவர் உலக யுத்தம் விஸ்வரூபத்தால் இன்று வெளிச்சத்துக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது நீங்கள் ஒரு பதிவராகவோ அல்லது பல பதிவுகளைப் படிப்பவராகவோ இருந்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள்............பதிவர் உலகின் நிஜரூபத்தை அறிந்துகொள்ள இது உதவுமே....
இன்றைய பதிவர் உலகின் உண்மையான நிலை என்ன...?
***********************************************************
இப்பதிவு பற்றிய கருத்து..................?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |