காதலில் ஆண்கள் பெண்களைக் கவர்ந்திடவும் பெண்கள் ஆண்களைக்கவர்ந்திடவும் பல வழிகள் முயற்சிப்பது உண்டு
பெண்கள் உடைகள்,முகச்சாயங்கள்,அணிகலன்கள்,இவைகளால்
தங்கள் இயற்கை அழகை மேம்படுத்துவார்கள்
ஆண்கள் பெண்களை ஈர்க்க என்ன செய்வார்கள்...?
அந்தக் காலத்தில் சிலர் கவிதை எழுதி காதலிக்க முயலுவார்கள் இன்னும் சிலர் தங்கள் கட்டு மஸ்த்தான உடலைக்காட்டி (அதுதான் ஜல்லிக்கட்டு,சிலம்பாட்டம்,....)
இந்தக் காலத்து ஆண்கள் தங்கள் உடம்பைக்காட்டினால் பெண்களுக்கு அவன் மேல் வந்த காதலும் வராமல் போய்விடும்
இப்போதெல்லாம் ஆண்கள் தாங்கள் ஒரு பணக்காரர்களாகக் காட்டிக்கொண்டு பெண்களைக் கவர நினைக்கிறார்கள்
இதோ இந்தப் படத்தில் நாம் காணும் தத்தா ப்ஹுகே ஒரு பணக்கார இந்தியர் அவர் அணிந்திருக்கும் தங்க ஆடையின் விலை ரூ. 11,83,610
இந்தத் தங்கச்சட்டையை 15 தங்கம் செய்யும் கொல்லர்கள் உழைப்பில் 24 காரட் தங்க நூல்களால் உருவானது
தங்கம் என்றாலே பெண்களுக்கு ஒர் ஈர்ப்பு உண்டு நிச்சயம் இதை அணித்திருக்கும் இந்தத் தங்க மனிதர் பெண்களைக் கவருவாரா ...?
..............................பரிதி.முத்துராசன்
thanks-source and images from zurmat.com
*******************************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |