கா....த......ல் -
இந்த மூன்று எழுத்தில்
மூச்சு இருக்கும்
கல்யாணம் ஆகிவிட்டால்
இந்த மூன்று எழுத்தே
மூச்சை அடைக்கும்.............
கம்பனாகட்டும்
வள்ளுவனாகட்டும்
பாரதியும் கூட......
இலக்கியச் சோம்பேறிகள்
காதலைப் பற்றி
இல்லாததையும் பொல்லாததையும்
எழுதிவைத்துப் போனார்கள்.....
அவர்கள் பெண்டாட்டிகள் யாரும்
அவர்கள் காதலித்த காதலிகள் அல்ல
அட...அப்புறம் ஏண்டா
இந்தப் பரதேசிகள்....
காதல் போயின் சாதல் என்று
பாடிவிட்டுப் போனார்கள்....?
இந்தக் காலத்தில்
காதல் செய்ய கவனம் தேவை...
காதலி ஏழையாக இருந்தால்
காதல் மோதல் வராது
காதலித்தவர்கள் ஊரும்
பற்றிக்கொண்டு எரியாது.....?
(அடே...வெங்காயப் பரிதி!
இந்தக் காலத்தில்
காதலன் ஏழையாக இருந்தால்
காதலே வராது....
காதலன் பணக்காரனாக இருந்தால்
காமக்காதல்தான்டா வரும்)
......................பரிதி.முத்துராசன்
thanks-images from deviantart.net
*************************************************************************
சில காதல் கீச்சுக்கள்.
இளந்தென்றல்
@Elanthenral
நீ படித்து விட்டு முடித்த புத்தகத்தை முழுவதுமாக படித்து பார்த்தேன்..நீ எதை ரசித்து படித்தாய் என தெரியவில்லை..நான் என்ன காதலன்?
sowmya
@arattaigirl
உன் பெயர் கொண்ட எழுத்துக்கள் மட்டும் என் விசைப்பலகையில்
அழிந்து அழிந்து என்னுள் பதிந்து கொண்டது
பாலமுருகன்
@baamaran
சந்திக்கத் தயங்கிக்கொண்டிருந்த
நாட்களில் நம் இருவரிடையே
ஏகாந்தமாய்ச் சிரித்து மகிழ்ந்தது
மௌனம் மட்டும் தான்!!
கருப்பு உருவம்
@joseph_selva
தாயின் கண்ணீரை உதாசீனப்படுத்தி விட்டு ஏதோ ஒரு பெண்ணின் நீலிக்கண்ணீரை துடைக்க விரந்து கொண்டிருக்கின்றான் பாவப்பட்ட காதலன்..!
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து........?
நறுமுகை
@Meeru_Twits
என்னைத் தேடி வராதே நான் நானாகவே செத்துக்கொள்வேன் காதலே!!!
BabyPriya
@urs_priya
அற்ப அயுளில் முடிந்து விடுவதில்லை..அற்ப ஆசைகளுக்கு இடம் கொடுக்காத ஆண் பெண் நட்புகள்..!!!
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
2013 - பிப் 14 - காதலர் தினம் கொண்டாடும் 13 அல்லது 14 பிகர்களை கரெக்ட் பண்ணிய காதல் தீவிரவாதிகளுக்கு வாழ்த்துகள்
நையாண்டி ®
@naiyandi
RT@urs_priya: அற்ப அயுளில் முடிந்து விடுவதில்லை..அற்ப ஆசைகளுக்கு இடம் கொடுக்காத ஆண் பெண் நட்புகள்..!!!"
பரிதி.முத்துராசன்
@PARITHITAMIL
காதலிக்க கவனம் தேவை! காதலி ஏழையாக இருந்தால் காதலில் மோதல் வராது.காதலன் ஏழையாக இருந்தால் காதலே வராது...!
பரிதி.முத்துராசன்
@PARITHITAMIL
காதலிக்கும் முன்...எதற்கும் காதலியின் BIO-DATA வாங்கிப்பாரு..அவள் அப்பன் பேரு மரம்வெட்டி மன்னார்சாமியானு..?
**************************************************************************
**************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து........?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |