google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காவியத்தலைவன்-படப்பாடல்கள் எப்படியிருக்கு?

Monday, August 18, 2014

காவியத்தலைவன்-படப்பாடல்கள் எப்படியிருக்கு?


ஏ.ஆர்.ரகுமானின் மந்திர இசையில் வசந்த பாலன் இயக்கம் 1920- காலக் கட்டத்தைச்  சார்ந்த நாடகக் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை படம் காட்டும் காவியத்தலைவன் படத்தில் மனம் கவரும் பாடல்கள்.....

1-யாருமில்லா........


பா.விஜய் வார்த்தைகளில் சுவேதா மோகன்-ஸ்ரீனிவாஸ் குரல்களில்  நமக்கு  பண்டைய திரைப்படங்களையும் அதில் அமைந்துள்ள உயிரோட்டமான கண்ணதாசன் வார்த்தைகளில் எம்.எஸ்.விஸ்வநாதன்  இசையமைப்பில் டி.எம்.எஸ்.-சுசீலா இணைந்து பாடிய பாடல்களை நினைவூட்டுகிறது 

2-ஏய் மிஸ்டர் மைனர்..........

                                       thanks-YouTube by Sony Music India
இதுவும்  முந்தைய பாடல் போன்று பழமை மாறாமல்  பா.விஜய் வார்த்தைகளில் ஹரிசரண்-சாஷா குரல்களில் இருவர் படத்தில் வரும் ஏ.ஆர்.ரகுமானின்  'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி' பாடலை நினைவுப்படுத்துகிறது

3-வாங்க மக்கா வாங்க..........

                                 thanks-YouTube by Sony Music India
நா.முத்துகுமார் வார்த்தைகளில் ஹரிசரண்-நாராயணன் பாடிய இப்பாடல் இன்றைய இசைப் பிரியர்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது.இது ஒரு நாடக குழுவின் விளம்பர பாடல் போன்று எல்லோருக்கும் அழைப்பு விடுவது போல் உள்ளது.

4-சண்டி குதிரை...........

                                       thanks-YouTube by Sony Music India
பா.விஜயின் நகைச்சுவை  வார்த்தைகளில் ஹரிசரண் மூச்சுவிடாமல் பாடிய இப்பாடல் படத்தில் வரும் ஒரு நகைச்சுவை நாடகத்தில் வருவதுபோல் தெரிகிறது பாடலில் பல்வேறு வித்தியாசமான இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு கடைசியில் சிரிப்போலியுடன் முடிகிறது 

5-சொல்லிவிடு சொல்லிவிடு.........

                                         thanks-YouTube by Sony Music India
பா.விஜய் எழுதிய இப்பாடலில் முகேஷ் குரலில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் நம் இதயத்தை தாக்குகிறது யுத்த களத்தில் அர்ஜுனன் அழுகுரலுடன் கிருஷ்ணனுடன்போரை நிறுத்த மன்றாடுவதுபோல் பாடுகிறது இப்பாடல் ஒரு நாடகத்தில் வருவதாயினும் நமக்கு தற்போதைய யுத்த உலகின் இருண்ட சூழ்நிலையை படம்காட்டுகிறது

6-திருப்புகழ்..........
                                               thanks-YouTube by Sony Music India
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலை ஏ.ஆர்.ரகுமானின் வீணை மிருதங்கம்  இசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாணி ஜெயராமின் இனிமையான குரலில் புத்துணர்ச்சி ஊட்டும் தெய்வீக தன்மையுடன் அன்னையின் தாலாட்டு கேட்பதுபோல் உள்ளது.

7-அல்லி அர்ஜுனா.........

                                           thanks-YouTube by Sony Music India
அமரகவி  வாலியின் வார்த்தைகளில் ஹரிசரண்-பேலா ஷிண்டே பாடிய இப்பாடல் பேலட் (‘Ballad’) வகையைச் சார்ந்தது அர்ஜுனனின் அல்லி மீது காதலும் அதைத் தொடர்ந்து நடக்கும் காமம்,கல்யாணம்,ஊடல்...என்று தமிழர் கலாச்சாரத்தை பறை சாற்றும் வார்த்தைகளுடன் வலம் வருகிறது 
 காவியத்தலைவன்-படப்பாடல்கள் எப்படியிருக்கு?  



வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி..........




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1