வான் நட்சத்திரங்கள்
வேண்டும் என்றாய்
வானில் நீந்தி
அத்தனையையும்
அள்ளிவந்தேன்
இந்தா என்று...
வெண் தாமரைகள்
வேண்டும் என்றாய்
குளத்தில் குதித்து
அத்தனையும்
அள்ளி வந்தேன்
இந்தா என்று...
இன்னும் நீ
எதை கேட்க்கிறாய்
என்னிடத்தில்
அன்பே!
என் உயிர்தான்
ஒளிந்து கிடக்கிறதே
உன் இதயத்தில்!
(தங்கத்தை மட்டும்
கேட்டுவிடாதே...
சுரங்கத்தையும்
சுரண்டிவிட்டார்கள்
இருந்ததையும்
பதுக்கிவிட்டார்கள்
இருப்பதையும்
விலை ஏற்றிவிட்டார்கள்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |