அடேய்..அறிவுச்செல்வா!
இப்போதெல்லாம் செய்திகளைத் தெரிந்துகொள்ளக்
கணணியை முடிக்கினால்...காணும் செய்திகள் அத்தனையும் கன்றாவியாக உள்ளதடா..
அடிக்கும் வெயிலுக்கு அரசியல்வாதிகள் அத்தனை பேரும்
குளுகுளு அறையில் அமர்ந்து அறிவிக்கை விடுவதிலும் கடிதம் எழுதுவதிலும் காலத்தைப் போக்குகிறார்கள்...
அவர்கள் வாயைத்திறந்தாலே ஒட்டு ஒட்டு என்ற சப்தம்தான்டா வருது
கொலையும் கொள்ளையும்தானடா செய்திகளை அடைத்துக்கொள்கிறது போதாக்குறைக்குப் பாலியல் வன்கொடுமை...
வாழ்க்கையை வெறுத்துச் சினிமா செய்திகளைப் பார்க்க பொழுது போக்குப் பக்கம் போனால் இந்தச் சினிமா செய்திகள் போடும் ஊடகங்கள் என்னத்தடா எழுதுறாங்க ...பரபரப்பா செய்தி போடனுமேனு இந்த ஊடகங்கள் போடும் செய்திகளைப் பாரடா............
புனே சர்ச்சில் ஆர்யா-நயன்தாராவின் திருமணம்!
அடடா..வாலிப வயோதிக அன்பர்கள் தப்பித்தார்கள் என்று ஆவலோடு படித்தால் ..அது சினிமா சூட்டிங்காமடா...
அடுத்துப் பாரடா...
கமல்-சூர்யா-ஷங்கர் கூட்டணியில் 'இந்தியன் 2'!
உள்ளே படித்துப்பார்த்தால்...வரும் ஆனால் வராதுனு ஆருடம் சொல்லுராங்கடா....125 கோடி பட்ஜெட் படமாம்....பேசிக்கொண்டு இருக்கிறார்களாம்
பவர் ஸ்டார் சீனிவாசன் மேல டி.ஆருக்கு அப்படி என்ன கோபம்?
ஆகா..டி.ஆருக்கும் பவருக்கும் ஏதோ மோதல் முட்டிக்கிச்சோனு படித்துப்பார்த்தால் ...அது முடி பிரச்சனைடா...பவர் டோப்பா முடி வச்சிருக்காராம் ..இவரு டாப்பா முடி வச்சிருக்காராம் .
(ஹீரோவாக நான் நடிப்பதை கிண்டல் செய்கிறார்கள். டோப்பா முடி வச்சவனெல்லாம் முயற்சி பண்றான்; நான் டாப்பா முடி வச்சிருக்கிறேன்; நடிக்கக்கூடாதா''..........டி.ஆர்.)
இப்பலாம் எந்தச் செய்தியும் படிக்கவே புடிக்கலடா..
அதிலும் இந்தச் சினிமா ஊடகங்கள் படம் காட்டும் சில்லாட்டைச் செய்திகளப் பார்த்தாலோ படித்தாலோ...கண்ணுக்குத்தாண்டா கெடுதி...வரவர..இந்த கொசுத்தொல்லைகள் தாங்க முடியலைடா
(அண்ணேன்...அதாவது பரவாயில்லை..இன்னும் சில வலைத்தளங்களைத் திறந்தாலே போதும் .. கம்பூட்டர் புல்லா விளம்பரப்பக்கிகள் வந்து ஒட்டிக்குது..அவைகளை விரட்டுரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது...)
************************************************************************
(சென்னையில் அடிக்கிற வெயிலுக்கு)
ஜில்லுனு ஒரு புகைப்படம்...
(சென்னையில் அடிக்கிற வெயிலுக்கு)
ஜில்லுனு ஒரு புகைப்படம்...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |