பள்ளிக்கூட காதல்
பாதியில் போனது
கல்லுரி காதல்
காணாமல் போனது
வாலிபத்தில் வயிற்று பசி
வாழ்வைத்தேடி காலம் போனது
இருந்த காதலும் இல்லாமல் போனது
இருந்த காதலியும்இல்லாமல் போனாள்
வாழ்க்கையில்
வசதி வந்தபோது
வயதும் ஏறிப்போனது
இப்போது காதலுக்கு
எங்கேப்போவது?
என்று இருந்தபோது
வருது வருது காதல் வருது
ஆடு மாடு காக்கா குருவி
எதைப்பார்த்தாலும்
கவிதையாக காதல் வருது
மக்களைப்பார்த்தால்
காதல் வருது
மக்களை மிதிபட்டால்
கோபம் வருது
இது மக்கள் மீது காதலோ?
கவலை வந்தால்
கடவுள்மேல்
காதல் வருது
கவலை போனால்
வந்த காதலும்
காணாமல் போகுது
கனவு வரும்போதெல்லாம்
கண்ணிகைமேல் காதல் வருது
அருகில் மனைவி வந்து விட்டால்
அந்த காதலும் காணாமல் போகுது.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |