google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வருது வருது காதல் வருது

Saturday, May 05, 2012

வருது வருது காதல் வருது



பள்ளிக்கூட காதல்  
பாதியில் போனது  
கல்லுரி காதல்
காணாமல் போனது

வாலிபத்தில் வயிற்று பசி
வாழ்வைத்தேடி காலம் போனது
இருந்த காதலும் இல்லாமல் போனது
இருந்த காதலியும்இல்லாமல் போனாள்  

வாழ்க்கையில்
வசதி வந்தபோது  
வயதும் ஏறிப்போனது
இப்போது காதலுக்கு
எங்கேப்போவது?
என்று இருந்தபோது
வருது வருது காதல் வருது

ஆடு மாடு காக்கா குருவி
எதைப்பார்த்தாலும்
கவிதையாக காதல் வருது

மக்களைப்பார்த்தால்
காதல் வருது
மக்களை மிதிபட்டால்  
கோபம் வருது
இது மக்கள் மீது காதலோ?

கவலை வந்தால்
கடவுள்மேல்
காதல் வருது
கவலை போனால்
வந்த காதலும்
காணாமல் போகுது

கனவு வரும்போதெல்லாம்
கண்ணிகைமேல் காதல் வருது
அருகில் மனைவி வந்து விட்டால்
அந்த காதலும் காணாமல் போகுது.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1