அந்த கூட்டத்தில்
அந்த கருவிழிகள்
என்னையே பார்த்தன
ஆயிரம் கோடி
அழகு நட்சத்திரங்கள்
அழகு நட்சத்திரங்கள்
அந்த விழிகளுக்குள்
ஒழிந்து கொண்டு
ஒளிர்வதுபோல்...
பட்டு ரோஜாவின்
சின்ன இதழ்கள்
சிந்திய சிரிப்பில்
பட்டாம்பூச்சி போல்
பறந்துபோனது கவலைகள்
இதற்கு மேலும்
பொறுக்க முடியாமல்
எழுந்துசென்று
அள்ளி அணைத்து
அவள் கன்னங்களில்
முத்தமிட்டபோது...
அலறினாள் அவள்
"அம்மா....பூச்சாண்டி" என்று
அம்மா வந்து புடுங்கிக்கொண்டாள்.
************************************
காணொளி-இதோ எந்தன் தெய்வம்...
.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |