google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிந்திய சிரிப்பில்

Sunday, May 06, 2012

சிந்திய சிரிப்பில்




அந்த கூட்டத்தில்
அந்த கருவிழிகள்
என்னையே பார்த்தன
ஆயிரம் கோடி
அழகு நட்சத்திரங்கள்
அந்த விழிகளுக்குள் 
ஒழிந்து கொண்டு
ஒளிர்வதுபோல்...

பட்டு ரோஜாவின்
சின்ன இதழ்கள்
சிந்திய சிரிப்பில்  
பட்டாம்பூச்சி போல்
பறந்துபோனது கவலைகள்

இதற்கு மேலும்
பொறுக்க முடியாமல்
எழுந்துசென்று
அள்ளி அணைத்து
அவள் கன்னங்களில்
முத்தமிட்டபோது...

அலறினாள் அவள் 
"அம்மா....பூச்சாண்டி" என்று 
அம்மா வந்து புடுங்கிக்கொண்டாள்.
************************************
காணொளி-இதோ எந்தன் தெய்வம்... 



.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1