google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எப்படி இருக்கிறாய் சிங்கம்?

Saturday, May 05, 2012

எப்படி இருக்கிறாய் சிங்கம்?



என்ன சிங்கம்
எப்படி இருக்கிறாய்?

அ...சிங்கமா
இருக்கேனப்பா?

சாப்பாடு எதுவும்
சரியில்லையா?

ஆமாம்ப்பா... 
எல்லாம் எடைபோட்டு
தருகின்றாங்கப்பா..
நானென்ன
காலையில்லொரு     
காட்டெருமை
மதியம்மொரு
புள்ளிமான்
நைட்டுக்க்கு...

ஏய்...நிறுத்து
முனியாண்டி விலாஸ் மாதிரி
பட்டியல் போடாதே
நீ இருப்பது வண்டலூர் ஜு
காடு இல்லை மறந்துவிடாதே? 

தெரியும்பா...
எங்க காடவிட மோசம்ப்பா  
உங்க நாடுப்பா.... .
நீங்க நிறையபேர்
மனுசனுங்க என்று
சொல்லிக்கிட்டு
மிருகங்களைவிட
மோசமா இல்லையாப்பா?

அட மட சிங்கமே!
உன்னை எங்க பிள்ளைகளுக்கு
உயிரோடு காட்டத்தான்
இங்கே அடைத்து வைத்திருக்கோம்

பொய் சொல்லாதப்பா
அதுக்குதான் டி.வி.இருக்கு
அதுல பாக்கட்டும்ப்பா
திறந்து விடுங்கப்பா
நான் காட்டுலபோய்
சுதந்திரமாய்
இருந்துட்டு போறேனப்பா
காந்திஜிக்கிட்ட
சொல்லலாமுணா
அவரையும்தான்
கொன்னுட்டிங்கலப்ப்பா...

அட சிங்கமே
உனக்கு இலவசமாக
சோறு போட்டா
நீ இப்படித்தான் பேசுவாய்

இலவசமுனு சொல்லாதப்பா
இப்ப அகராதியில
விலை யில்லாததுன்னு
மாத்திட்டாங்க
தெரியாதாப்பா உனக்கு?

சரி..நீ ரொம்ப பேசுகிறாய்
உள்ளேயே கிட....
நான் போகிறேன்   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1