லண்டன் டவர்-
ஆங்கிலேய அரசர்களின்
அன்றைய பாதுகாப்பு கோட்டை
இன்று இந்திய நாட்டின்
இணையில்லா பொக்கிசம்
கோகினூர் வைரம் இருக்குமிடம்
ஆங்கிலேய அருங்காட்சியகம்
அவர்தம் பாதுகாப்பு பெட்டகம்
அது மட்டுமா?
இந்தியரின் வீரமும்
இதனுள் அல்லவோ
இருக்கிறது காட்சிபொருளாக!
அன்று அபகரிக்க வந்த
ஆங்கிலேயரை எதிர்த்து
அடிபணியாது மாண்ட
இந்திய வீரர்களின்
இந்திய மன்னர்களின்
இரும்பு கவசங்களும்
குத்து ஈட்டி கொடுவாள்களும்
திப்புவின் வீரமும் கவசமும்
இங்கேதான் கொழுவிருக்கின்றன
விஜய் மல்லையா மீட்டது
திப்பு வாளைமட்டும்தான்
அவர்களுக்கு அது அருங்காட்சியகம்
அவர்தம் பெருமை பேசும்
அரிய பொருட்களின் கூடம்
அந்தோ!அது நமக்கு
இந்திய வீரத்தையும் மானத்தையும்
இழிவு படுத்தும் இருப்பிடமல்லவோ?
கொச்சைபடுத்தும் கொழுவிடமல்லவோ?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |