google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மாமனா? மச்சானா?

Monday, July 02, 2012

மாமனா? மச்சானா?


அண்டாவிலும் குண்டாவிலும்
அமர்ந்திருந்து நீங்கள்
மந்திரங்கள் சொன்னால்
மழை வரும் என்றால்...

வராது பண்டிதர்களே!


அழைத்தவுடன் வருவதற்கு
மழை என்ன உங்களுக்கு
மாமனா? மச்சானா?

ஆழ்கடலுக்குள் அமர்ந்திருந்து
மந்திரங்கள் சொன்னால்தான்  
மழை வந்தாலும் வரும்.... 
முடியுமா உங்களால்?

என்றுதான் நீங்கள்
மூட நம்பிக்கைகளை
மூட்டை கட்டுவீர்களோ
அன்றுதான் பெய்யும்
அடைமழை இங்கே  
************************************
காணொளி-


Thanks-YouTube-Uploaded by maraikayar on Dec 12, 2010

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1