அடங்காத கோபம்
வரும்போதெல்லாம்
அப்படியே
அமர்ந்து விடுவேன்
அமைதியாக......
தீராத துயரம்
வரும்போதெல்லாம்
அப்படியே
மண்டியிட்டு
மன்னிப்பு கேட்பேன்
மனசாட்சியிடம்...
இதய துடிப்புத்தான்
நான் உச்சரிக்கும்
மந்திரம்
ஆழ்ந்த சுவாசம்தான்
அனைத்துக்கும்
தீர்வு தரும்
தந்திரம்
உடலையும்
நேசித்தால்....
எந்த நோயும் தீண்டாது
உள்ளத்தை
நேசித்தால்
எந்த தீயும் சுடாது
என் இறைவன்
என்னுள்ளே
என்றும் இருக்கிறான்
நன்றாய் இருக்கிறான்
சுய சிந்தனையின்
சுடராய் இருக்கிறான்
*************************
காணொளி-அமைதியான.....
Thanks-YouTube-Published on Apr 4, 2012 by goldtreat
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |