Laughing by upylaffy
வீடே இல்லை
ஆனாலும் நான்
வீட்டு வரி செலுத்துகிறேன்
(மாநகராட்சி
வரி உயர்த்தும்போதேல்லாம்
வீட்டு உரிமையாளர்
வாடகையும்
உயர்த்துகிறார்)
அரசு வேலை
கிடைக்க வில்லை
ஆனாலும் நான்
அரசுக்கு செலுத்துகிறேன்
வருமானவரி
(மாதந்தோறும் முதலாளி
என் ஊதியத்தில்
வருமான வரி பிடித்து
அரசுக்கு
செலுத்துகிறார்)
கடவுளைக் கண்டதில்லை
ஆனாலும் நான்
தெருவில் நடக்கும்
திருவிழாவுக்கு
நன்கொடை கொடுக்கிறேன்
(இல்லையேல்
அந்த தெருவில்
நடந்தால்
துஷ்ட்டன் என்று தூற்றுவார்)
இப்படித்தான்
தலையே இல்லாமல்
தலைவரி
செலுத்துகிறேன்
தலைவிதி யென்று......
தலை இல்லையென்றால்
தலை வலியும் இல்லை...?
*************************
காணொளி-நான் ஏன் பிறந்தேன்....
Thanks-YouTube-Uploaded by rajshritamil on Jul 5, 2011
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |