google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இதை யாரும் படிக்கவேண்டாம்

Friday, April 06, 2012

இதை யாரும் படிக்கவேண்டாம்


என்ன எழுதுவது?
எதை எழுதினாலும்
யாரோ எழுதிவிட்டர்கள்  
என்று தோன்றுகிறது.
எழுதும் வார்த்தைகளெல்லாம்
அடுத்தவர் வார்த்தைகளாக
அடிக்கவருகிறது.

கதை எழுதுவதா? 
கட்டுரை எழுதுவதா? 
கவிதை எழுதுவதா?

கதைஎழுதும்போது...
எழுதும்போதே 
தூங்கிவிடுகிறேன்
எழுதியதை யார் படிப்பது?

கட்டுரை எழுதுவதா?
எதை எழுதுவது?
அடிக்கிவைத்தவை
அடுக்கடுக்காய் அலமாரியில். 

கவிதை எழுதுவதா?
கண்முன் வரும் 
எல்லோரும் கவிஞர்களே
கான்பவைகளெல்லாம்
கவிதைகளே!.

இல்லாததையும் 
பொல்லாததையும்
எழுதலாம் என்றால்
அட...ஆண்டவா!
அதையும் 
எழுதியவர்கள் ஏராளம்.

கருத்துக்கள் எழுதினால்
மோதல்கள் வருது
நடப்பதை எழுதினால்
அழுகை வருது.

உன்னைப்பற்றி எழுதினால்
கோபம் வருது உனக்கு.
என்னைப்பற்றிதான்
இனிமேல் எழுதவேண்டும்

என்னைப்பற்றி எழுத
என்ன இருக்கு?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1