google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒரு நினைவுப்பதிவு

Friday, April 06, 2012

ஒரு நினைவுப்பதிவு




தேம்ஸ் நதியில்
ஒரு குருஸ் பயணம் 
மயக்கும் மது கோப்பைகளை
ஏந்திநிற்கும் மேசைகள்.
வாழ்த்துகள் பரிமாறும்
நண்பர்கள் நண்பிகள்
பிக்பென் ஒலிக்கும்
கால ஒலிஓசை 
கரையில் கம்பீரமாய்
பார்லிமென்ட் கட்டிடம் 
இதமாய் தழுவும் 
இங்கிலாந்து காற்று 
இருளிலும் மின்னும்
லண்டன மாநகரம்
இருந்தென்ன?
ஏதோ ஒரு வாசனை
எனக்கு வீசவில்லை 
ஒரு கவிதை எழுதக்கூட
எனக்கு தோணவில்லை 
இறுகிய மனமாய் இருந்தேன். 
கூவமே! நீ
இல்லாததுதான்
குறையாக இருந்தது.
             

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1