google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதலிக்கப் பயமாயிருக்கு!

Friday, December 28, 2012

காதலிக்கப் பயமாயிருக்கு!











































(இது சினிமா படம் அல்ல 
நாளை சினிமா படம் 
தலைப்பாக வந்தாலும் வரலாம்)


அய்யன் வள்ளுவருக்கோ
காதல் ஒரு கவலை நீக்கி!
கவிச்சக்கரவர்த்திக்கோ
காதல் கண்ணியமானது!
என் உயிர் பாரதிக்கு
என்றும் காதல் சுவாசக்காற்று!

அன்றைய புலவர்கள்
காதல் செய்ததாலேயே
கவிதை எழுதினார்கள்
அவர்களால்
காதல் பெருமைப்பட்டது.

இன்றைய கவிஞர்கள்
காதல் செய்வதற்காகவே
கவிதை எழுதுகிறார்கள்
இவர்களால்
காதல் சிறுமை பட்டது.

காதலில்கூடச் சாதி...?
கள்ளக்காதல் ஒரு சாதி.
நல்லக்காதல்? இன்னொரு சாதி.
நயவஞ்சகக் காதல் எந்தச் சாதி...?

இப்போது காதலும் அரசியல் ஆனது.
அடி பிடி தகராறு கலவரம்
அதுவும் சாக்கடையானது.    

அது சரி...அன்பே!
என்னைக் காதலிக்கும்
நீ எந்தசாதி...?
காதலிக்கப் பயமாயிருக்கு!

(நான் உன் பெஞ்சாதி..
யோவ்..பெருச்சாளி
என்ன பகல் கனவா...?)

........................பரிதி.முத்துராசன்

thanks-images-deviantart   
 ********************************************************

சூடான செய்தி....
பெண்கள் பற்றிய பேச்சால் சர்ச்சை: கட்சி மேலிடம் சொன்னால் பதவி விலக தயார் - பிரணாப் முகர்ஜி மகன் பேட்டி 


பழைய பாத்திரங்களுக்கு 
ஈயம் பூசியது போல சில பெண்கள்-        
(ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்) அபிஜித் முகர்ஜி





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1