=== காமத்துப்பால் தந்த கவிதைகள்-19 ===
டாஸ்மாக் வாசலில்
மயங்கி கிடக்கும்
‘குடி’ மகன்களே!
அய்யன் வள்ளுவர்
சொன்னதைக் கொஞ்சம் கேளும்...
உண்டால் தான் மயக்கம் தரும் மது-அவளை
கண்டாலே மயக்கம் தரும் காதல்
அதனால் அன்பர்களே!
எல்லோரும் காதல் செய்யுங்கள்.
காதல் மயக்கத்தில் திளையுங்கள்
மது மயக்கத்தைக் களையுங்கள்
அதனால்தான் அன்பர்களே!
அய்யாக்கள் புறப்பட்டார்கள்
கையில் பூட்டுடன்...
திண்டுக்கல் பூட்டுடன்...
யோவ்..பரிதி!
அவளைக் கண்டதாலேயே...
அவள் மேல்
காதல் கொண்டதாலேயே...
ஒரு தலைக் காதலால்
கொதிக்கும் உள்ளத்தை
தணிக்கும் எண்ணத்தோடு...
மதுக்கடை பக்கம் வந்ததால்...
மண்ணாங்கட்டி...
வந்துட்டானுக கவிதையோடு...
விளங்காதவனுக.
thanks -img from deviantart
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |