டெங்கு கொசுவை விட
நான் மோசமாடா...?
யாரிடமும் சொல்லாம
அது மட்டும் வந்துச்சு..
நெல்லையிலிருந்து
மதுரை வரை
வித்தௌட் டிக்கட்ல!
ஏண்டா...அறிவுச்செல்வா!
என்னை மட்டும்
மதுரை மண்ணை
மிதிக்கக் கூடாதுன்னு...
அடம்பிடிக்கிறாங்க.
நேத்துதாண்டா
அம்மா மீனாட்சி
கனவுல வந்து கேட்டுச்சு...
"மகனே! மதுரை வீரா!
மார்கழி மாசம் முடியப்போகுது...
பஜனைக்கு நீ எப்ப வருவ...?"
(அண்ணேன்!
உங்களுக்கு என்னாச்சு..
இப்பலாம் பகல்ல கூட
இப்படிப் பிதற்ற ஆரம்பிச்சிட்டிங்க..)
......பரிதி.முத்துராசன்.
********************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |