ஏண்டா..அறிவுச் செல்வா!
லட்டுப் படம் பார்த்ததிலிருந்து
நம்ம பவர் ஸ்டார் ஞாபகமாகவே இருக்குடா..
அவருக்கு ஏதாவது கொடுக்கனுமடா...
அவருக்கு ஆஸ்கார் விருதுக்கு யாரிடம் சொல்லுறதுடா...
அஸ்காரின் சிறந்த நடிகருக்கான விருது பெறுவதே ஒவ்வொரு நடிகரின் வாழ்நாள் குறிக்கோளாக இருக்கும்
ஆஸ்கார் விருது ஆண்டுதோறும் சினிமாவில் ஒவ்வொரு துறைகளிளும் சிறந்த சாதனைப் படைப்பவர்களுக்கே வழங்கப்படுவதாகும்
இந்தியர்களில் இரண்டு விருதுகள் இசைக்காக வாங்கிய தமிழர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் நாம் அறிந்ததே
நடிப்புத்துறையில் ஆஸ்கார் விருத்துக்கு மிகப்பெரிய தகுதிகள் எதுவும் கிடையாது ..அதாவது நடிக்கவேண்டும் என்று அவசியமில்லை
பிறகு எதை வைத்து சிறந்த நடிகருக்கான இந்த விருது வழங்கப்படுகிறது...?
-who has delivered an outstanding performance அதனால்தான் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை -the Academy Award of Merit for Performance by an Actor என்ற அளவுகோலின் படியே வழங்கப்படுகிறது
அப்படிப்பார்த்தால் இன்று கண்ணா லட்டு தின்ன ஆசையா...திரைப்படமே பவர் ஸ்டார் ஒருவரால் மட்டுமே திரையரங்குகளில் அரங்கு நிறைந்து ஓடுகிறது
அவருடைய outstanding performance வயது வித்தியாசமின்றி அனைவராலும் ரசிக்கப்படுகிறது
மேலும் இன்று தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது உலகத் திரைப்பட வரலாற்றிலே நடிக்கத்தெரியாத (அதாவது நடிப்புத்துறையில் இல்லாதிருந்த) மருத்துவத் துறையில் இருந்த ஒரு டாக்டர் திரையுலகில் புகுந்து இன்று ஒரு கலக்கு கலக்குகிறார் என்றால் அதுவே உலகச் சாதனை....
ஏண்டா அறிவுச் செல்வா...
ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்று இல்லைடா அதற்கு NOMINATION-செய்யப்பட்டாலே அதுவே பெரிய சாதனையடா..
இப்போதைக்கு அதை கையில வச்சி போட்டா எடுத்தாலே பெரிய விசயம்டா....எங்கப் போயி வாங்குறது...? அதுதாண்டா தெரியல்ல..
(அண்ணேன்....முன்பெல்லாம் எதுனாலும் மூர் மார்க்கெட்ல கிடைக்கும் வேணும்னா ..நம்ம ரகுமான் சார்தான் இரண்டு வச்சிருக்காரே அதில ஒன்றைக் கேட்டுப்பார்ப்போம்...இல்லேன்னா தூக்கிட்டு வந்திடுவோம்...அண்ணேன்)
...........................................பரிதி.முத்துராசன்
**********************************************************************************
உங்கள் பார்வையில்...
பவர் ஸ்டார்க்கு ஆஸ்கார் விருதுக்கான தகுதிகள் இருக்கிறதா...?
********************************************************************************
கண்ணா லட்டு தின்ன ஆசையா-ஒரு ‘பவர்’ பார்வை!
*******************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |