google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இறக்கும் கனவு....?

Sunday, February 17, 2013

இறக்கும் கனவு....?


குழந்தையாக 
இருந்த போது.....
என்ன கனவு கண்டேன்...?
எதுவும் நினைவில்லை.

வளர்ந்தப் பிறகு
வந்து சேர்ந்த கனவுகள்...
வின்மீன்களைவிட அதிகம்...







































எல்லாம் ஜொலித்தன 
எதுவும் நிலைக்கவில்லை 
எரிகல் போல் என்மீதே விழுந்தன 
என்னைக் காயப்படுத்திச் சென்றன 

பள்ளியில் படிக்கும் போது
அறிவாளிக் கனவு 
தேர்வு எழுதி  தோற்றது 

கால்லூரியில் படிக்கும் போது 
காதல் கனவு 
காசுயில்லாத கவலையில் 
காணாமல் போனது 

வேலையில் சேர்ந்த போது 
சுயமரியாதைக் கனவு 
அடிமைத்தனத்தில் 
அழிந்து போனது.

திருமணமான போது 
சுதந்திரக் கனவு 
தொலைந்து போனது 

இப்படி வலித்த கனவுகள்
அவ்வப்போது நிறைய.... 

அதுவும் எழுதும் போது
கம்பனைப் போல் எழுதவேண்டும் 
பாடும் போது பாரதி போல் 
ஆனால் எழுதிய  பிறகு 
எனக்கே எதுவும் புரிவதில்லை....
இந்தக் கவிதையைப் போல! 

இப்போது இருக்கும்  கனவு...
இறக்கும் கனவு...?

எந்த வேதனையும் இல்லாமல் 
தூக்கத்திலேயே போய்விடவேண்டும்! 

.........................பரிதி.முத்துராசன்    

***************************************************
                                                       thanks-YouTube-goldtreat

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1