google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரதமர் பதவிக்கு தீயா வேலை செய்யிறாரு மோடி...?

Friday, July 19, 2013

பிரதமர் பதவிக்கு தீயா வேலை செய்யிறாரு மோடி...?


பில்லா 2 படத்தில் தல அஜித் பேசும் பன்ச்-“ என்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஏன் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்கியது “ அப்படித்தான் எப்படியாவது பிரதமர் நாற்காலியை கைப்பற்றவேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் தீயா வேலை செய்யிறாரு மோடி. 
  
1990 ஆம் ஆண்டு எல்.கே. அத்வானி ரத யாத்திரை போன்று இவரது யாத்திரையும்  இந்துக்களின் வாக்குகளை அள்ளிக்கிட்டு வரும் ..ஆனால் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவது கடினம் என்பதை தெரிஞ்சிக்கிட்டாரு.  அதனால் அவர் இன்று மதசார்பின்மையைப் பற்றி பேசுகிறார். இது எப்படி இருக்கு தெரியுமா? கடவுளே கடவுள் இல்லை..இல்லவே இல்லை.. என்று பிரச்சாரம் செய்வது போல் உள்ளது


இந்துக்கள்+இந்து அல்லாதவர்கள் என்று தனித்தனி அபார்ட்மென்ட்களில் பயணிக்காமல் இருவரையும் ஒரே படகில் ஒன்றாக அழைத்துச் செல்வேன்   என்று மதசார்பற்றவராக தன்னைக் காட்டிக்கொள்கிறார்.
முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள்..... "கேரளாவில் நான்கு பேர்களில் ஒருவர் முஸ்லிம்,மேற்கு வங்கத்தில் 30% முஸ்லீம்கள்,அசாமில் ஒவ்வொரு நான்காவது நபர் முஸ்லீம்,உ.பி.யில் 30 மில்லியன் முஸ்லீம்கள்,பீகாரில் 15 மில்லியன் முஸ்லிம்கள், கர்நாடகாவில் ஒவ்வொரு ஒன்பதாவது வாக்குரிமை பெற்றவர் முஸ்லீம்..." என்று முன்னாள் தூதர் பவன் கே வர்மா சமீபத்திய அவரது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதான் மோடி விரிக்கும் வலையும் முஸ்லிம்களின் வாக்குகளை அள்ள வைக்கும் (எலிப்)பொறிகளில் வைக்கும் வடையும் ஆகும்
வடை போச்சு கதையாக காமெடி ஆகுமா...? அல்லது அவரே பொறியில் மாட்டிக்கொள்ளும் நிலைவருமா...?


மோடியின் விமர்சகர்களும் எதிர்ப்பாளர்களும் 2002-ஆம் ஆண்டு  பிந்தைய கோத்ரா கலவரத்திற்கு அவர் உடந்தையாக குறிப்பிட்டு அவருக்கு ஆப்பு வைக்கிறார்கள் ஆனால் மோடியோ அவரது சமீபத்திய ராய்ட்டர்ஸ் (Reuters)பேட்டி மூலம் அவர்களது வாயடைக்க எண்ணுகிறார்.

                                  thanks-YouTube-by prashantsaran
கோத்ரா கலவரம் பற்றியக் கேள்விக்கு மோடியின் முகத்தில் பதட்டமும் வார்த்தைகளை தற்காப்பாக உபயோகித்ததையும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் ரோஸ் கொல்வின் மற்றும் சதருபா பட்ஜி தெரிவிக்கின்றனர் 
"ஒரு நாய்க்குட்டி எனது வாகனத்தில் அடிபட்ட்டு இறந்தால்கூட மிகவும் வருத்தப்படுவேன்" என்று நாய்க்குட்டி கதை சொன்ன மோடியின் கதையை யாரும் நம்பத் தயாரில்லை.

மோடியின் முஸ்லீம் எதிர்ப்பு,2002 பிந்தைய கோத்ரா கலவரத்தின் முக்கிய குற்றவாளி, இன்னும் சமீபத்திய குஜராத் போலீஸ் மூலம் நடந்த இஷ்ரத் ஜஹான் மற்றும் பிற என்கவுண்டர் கொலைக் குற்றம்.போன்றவைகளை அவருக்கு எதிராக முன்னிருத்தி காங்கிரஸ் வலைவிரிக்கிறது 

http://25.media.tumblr.com/tumblr_m51k58vXKw1rrh5hdo6_500.jpg

யார் வலையில் யார் மாட்டுவார்களோ....?  
சமீபத்திய கருத்து.....உத்திரகான்ட் பேரழிவிலிருந்து 15 ஆயிரம் அவரது மாநிலமக்களைக் காப்பாற்றியதாக பெருமை பேசும் மோடி ஏன் எல்லா மாநில மக்களையும் காக்க எண்ணவில்லை என்று...? அப்புறம் அவர் எப்படி தேசியவாதியாவார்? என்று.
  
இப்படி பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் பார்க்கும் போது 
பிரதமர் பதவிக்கு தீயா வேலை செய்யிறாரா...? 
அல்லது தீயவரா வேலை செய்யிறாரா..?
எதுவும் புரியவில்லை... சந்தானம் மாதிரி அவருக்கு  காசு வாங்கிக்கிட்டோ வாங்காமலோ ஐடியா கொடுக்கும்  அறிவாளி யாரோ?..
காங்.-பாஜக இரண்டு பேரும் இல்லாத ஆட்சி வரவேண்டும் ஆப்பு அசைத்த குரங்குகள் போல் இரண்டுபேரும்  அவஸ்தை படவேண்டும்




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1