வரும் செப்.1 அன்று சென்னையில் நடக்கும் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கு வரும் வெளியூர் பதிவர்கள் அனைவரையும் வருக..வருக...என்று முதலில் வரவேற்று....
அய்யாமார்களே! அண்ணன்மார்களே! எல்லோரும் கேட்டுக்குங்க...அவரும் ஒரு பதிவர்தான்...
( யோவ்...அவர் பதிவர் என்கிறதுக்கு என்னையா ஆதாரம் இருக்கு...? அப்படின்னு யாரும் அவரைக் கேட்டுப்புடாதீங்க அப்படி இப்படின்னு வலைப்பூ ஆரம்பிச்சு ஒரு வருடம் 4 மாதத்தில் ஆயிரம் பதிவுகள அவரும் நெருங்கிட்டார்ரர்ர்ர்ர் ..)
கடந்த ஆண்டுப் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள அவரும் ஆவலுடன் இருந்தார்..ஆனால் அப்போது அவர் பதிவு எழுத ஆரம்பித்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை அதனால் கொஞ்சம் தயக்கம்...
இந்த வருடம் அவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொல்ல...சாரி....கொள்ளப் பெயர் கொடுத்துவிட்டார்ர்ர்ரர்ர்ர்ரர்...
அப்புறம்தான் அவருக்கு வந்தது ஆழ்ந்த கவலை......?
அண்ணன் ஆரூர் மூனா செந்தில் பதிவர் சந்திப்பு பற்றிய பஞ்சேந்திரியா...பதிவுகளையும்
"பதிவர் சந்திப்புக்கு அருகில் நெருங்கிவிட்டோம். கடைசி வாரம் இது. வேலைகள் அடிப்பொலியாக நடந்து கொண்டு இருக்கிறது"....என்று அவர் அவ்வப்போது விடும் அறிவிக்கையையும் பார்த்து ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு புறம் அவரு வயிற்றைக் கலக்கியது....?
அவர் ஒரு பதிவர் என்பது அவரைத் தவிர யாருக்கும் தெரியாது அவருடன் பணிசெய்பவர்களுக்கும் இதுவரை தெரியாது (எப்பம்பார்த்தாலும் அந்த ஆளு கம்புட்டரை தட்டிக்கிட்டு கிடக்கான்...பெரிய கம்புவெட்டி இஞ்சி..நியறு மாதிரி..என்பாயிங்க அவர எல்லோரும் மறைமுகமா..) அவரு குடும்பத்திலும் இப்படி எதையாவது அவர் கிறுக்கிக்கொண்டிருப்பது அவர் மனைவிக்குக் கூடத் தெரியாது...
பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலைப் பார்த்ததும் அவருக்கு பகிர் என்றது (காலை 9.40 மணிக்குப் பதிவர்கள் சுய அறிமுகம்) அட்டடா...அவரு முகமூடி கிழிஞ்சிடுமே... அப்புறம் ஒர் ஐடியா அவருக்கு வந்துச்சு...எல்லோருடைய அறிமுகமும் முடிஞ்சப் பிறகு போனால்...? (யோவ்...சோத்துக்கு வந்துட்டியானு...? யாரும் கேட்டுடக்கூடாதே...)
புலவர் அய்யா தலைமை தாங்குறாங்க...
அண்ணன் ஆரூர் மூனா செந்தில் வருறாக...
இன்னும் விழிப்புணர்வு கவிஞர் மதுமதி வருறாக.....
கவிதை வீதி சௌந்தர் வருறாக....
அண்ணன் சிபி செந்தில்குமார் வருறாக...
டி.என்.முரளிதரன் வருறாக...
அண்ணன் திண்டுக்கல் தனபாலன் வருறாக...
(யோவ்..இப்படி 200 பேர்களுக்கு மேல் பதிவர்கள் வருகிறாங்க அவ்வளபேருக்கும் ராகம் போடுவியா...? ஏதோ சிரிப்பு பதிவுனு படிக்க வந்தா இப்படிப் போட்டு கடிக்கிறீயே....படு பாவி என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது..சரி..எல்லா நண்பர்களும் வாருங்க...உங்களை அவர் நேரடியாக வரவேற்காவிட்டலும் அப்படி ஓரமா எட்டிப்பாருங்க..யாராவது முகமூடி போட்டுக்கிட்டு நின்றால்...அது வேறு யாருமில்ல அவர்தாங்க...அந்த முகமூடிப் பதிவர்..)
இதுல தமாசு என்னனா...
"இந்த ஞாயிறு அப்படியே தூங்க விட்டுடாத...காலையிலே எழுப்பிவிடு...?"
என்று அவரது மனைவியிடன் இன்று அவர் சொன்னபோது...
"ஏங்க காலையிலே அப்படி எங்கப் போறீங்க...?" என்று கேட்க...
சரி சொல்லிவிடலாம் என்று அவரும்....
"நான் பதிவர் சந்திப்புக்கு போகணும்மா.."என்று சொல்ல..
அதற்கு அவரது மனைவியோ ...
"பதிவரா...? அப்படினா...?" என்று அவரை மேலும் கீழும் பார்க்க...
"அதுதாம்மா...பிளாக்கர்...பிளாக்கர் சந்திப்பு" என்றார் அவர் ....
ஒ...கருப்பர்கள் எல்லாம் ஒண்ணா சந்திக்கிங்களா...?
ம்கூம்..இதற்கு மேல் அவரால் விளக்கம் சொல்ல முடியாமல்....
இப்படி முகமூடி போட்டுக்கொண்டு.......பதிவர் சந்திப்புக்கு வரும் ஒரு முகமூடிப் பதிவர் வேறு யாருமல்ல இவரேதான்...
(மீண்டும் உள்ளூர் வெளியூர் பதிவர்கள் சந்திப்புக்கு வரும் வராத அன்பர்கள் நண்பர்கள் அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி... நண்பர்களே! இப்பதிவு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது மற்றபடி பதிவர் நண்பர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.......)
தீர்ப்பு-இதனால் அறிவிப்பது என்னவென்றால்...நம்ம (வருத்தப்படாத) வலைப்பதிவர்கள் சங்கத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கலாமே....? (அய்யா...நியாயன்மார்களே! நான் ஏதாவது தப்பாச் சொல்லியிருந்தா காதில போட்டுக்காதீங்க....)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |