google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பொன்மாலைப் பொழுது-சிறப்புப் பார்வை

Monday, August 26, 2013

பொன்மாலைப் பொழுது-சிறப்புப் பார்வை

(குறிப்பு- ஆதவ் கண்ணதாசன்-காயத்ரி நடித்து விரைவில் வரவிருக்கும் பொன்மாலைப் பொழுது படம் பற்றி சில கண்கவரும் புகைப்படங்களுடன்....)



ஏ.சி.துரையின் இயக்கத்தில் ஒர் உண்மைச் சம்பவத்தின் பிரதிபலிப்பே  பொன்மாலைப் பொழுது திரைப்படம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் படம் எந்த உண்மையான  சம்பவத்தின் அடிப்படையில் நடந்த உண்மைச் சம்பவம் என்பது மட்டும் தெளிவாகச் சொல்லப்படவில்லை 



பள்ளிப்பருவத்தில் ஏற்படும் காதலைப் பற்றியும் தந்தை மகனுக்குள் உள்ள பாசம் வேசம் உறவு பற்றியும் நிஜத்தில் பார்த்த சில சம்பவங்களின் தொகுப்பு... இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பேசப்படும் என்று அவர் சொல்கிறார்.


city

ஆனால் படத்தின் புகைப்படங்களைப் பார்க்கும் போது.....ஆதலால் காதல் செய்வீர் மாதிரி மீண்டும் ஒரு தில்லாலங்கடி திரைப்படமாக இருந்தாலும் இருக்கலாம்.......எப்படியோ படத்தைப் பார்த்து யாரும் கெட்டுப் போகாமல் யாராவது ஒருவர் திருந்தினாலும் அந்தப் பெருமை அண்ணன் துரை அவர்களைச் சேரும்

http://i.cdn.turner.com/ireport/sm/prod/2012/05/24/WE00764354/2108931/pmp70jpg-2108931_lg.jpg

படத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு.........
1-கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் அறிமுகமாகி நடிக்கும் படம் என்பது கவியரசர் மீது நேசம் கொண்டவர்களின் கூடுதல் விருப்பம்  


gayathri

2-நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம் புகழ் காயத்ரி நடித்து வெளிவரும் மூன்றாவதுபடம்....
“நான் நிறையப் படங்களில் நடிப்பதில்லை. நல்ல கதையாகத் தேர்வு செய்து சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். அப்படித் தேர்வு செய்து நடித்த படம் தான் ‘பொன்மாலைப் பொழுது"......அம்மணி நல்ல கதையுள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிப்பதாகக் கேள்வி.

freeonlinephotoeditor
3-அலட்டிக்காத யதார்த்தமான நடிப்புக்கு பெயர் பெற்ற கிஷோர் இப்படத்தில் இருப்பது இந்தப் படத்துக்கு இன்னுமொரு எதிர்பார்ப்பு 

படம் புது நடிகரை வைத்து எடுக்கப்பட்டாலும் நட்சத்திர நடிகர் படம் போன்று அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.


                            thanks-YouTube-by thinkmusicindia

படத்தின் இசை சி.சத்யா.......பாடல்கள் தாமரை.மதன் கார்க்கி,கார்த்திக் நேதா எழுத.......பாடல்களைப்பற்றி அழகான எளிமையான பீட்டுடன் தொடங்குகிறது முதல் பாடலான "அடிக்கடி முடி கலைவதில் அவதரித்தாய்-நீ அனுதினம் எனைத் தொலைத்திட வழிவகுத்தாய்...' என்கிற பாடல் என்று பாராட்டப்படுகிறது.




இப்படிப் பல சிறப்பு(புகைப்படங்)களுடன்......? வரும் பொன்மாலைப்  பொழுது படத்தைத் திரையில் பார்த்து உங்கள் பொன்னான பொழுதைக் கழியுங்கள்...களிப்புடன் களியுங்கள்....  LOVE-COME...FALL IN LOVE
உலகத்துல யாருமே பண்ணாத தப்ப நீ பண்ணலே...
  
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1