google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அரசியல் செய்திகளும் சிந்தனைகளும் (கருத்து கருந்தேள்)

Saturday, September 28, 2013

அரசியல் செய்திகளும் சிந்தனைகளும் (கருத்து கருந்தேள்)

நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்-கலைஞர்.......
சினிமா நூற்றாண்டு விழாவில் பெரிய கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது தன்னை அழைக்காதது நல்லவேளை தன் தன்மானம் காப்பாற்றப்பட்டது....என்று பெருமிதம் கொண்டார் கலைஞர் கருணாநிதி 
கருத்து கருந்தேள்......
மேடையில் ஏற்றுகிறேன் என்று தாங்களை நகரும் நாற்காலியில் வைத்து கீழே தள்ளி விட்டாலும் தள்ளியிருப்பார்கள்....நல்லவேளைதான் உங்களை அழைக்காதது....ஹி..ஹி..

********************************************************************************

ராகுலின் ஆவேசம்............
தண்டனை பெற்ற எம்பி,எம்எல்ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டம் முட்டாள்தனமானது கிழித்து எறிய வேண்டும்..சுத்த அபத்தம் என்று ராகுல் திடீர் ஆவேசம்....
கருத்து கருந்தேள்..........

அண்ணேன்...என்ன இது? கிழிஞ்சது கிருஷ்ணகிரி கதையாட்டம் இருக்கு...? அடுத்த பிரதம வேட்பாளரு  நீங்கதான்னு அம்புட்டுபேரும் உங்க கட்சியில அலம்புராயிங்க...நீங்க என்னடானா...எதுவும் தெரியாத மாதிரி இப்ப இப்படி ஆ...வேஷம்....காட்டுறீங்க....அட இந்த இந்திய அரசியலே எதுவும் புரியமாட்டேங்குதையா....இத்தாலி..ஜெர்மனி...இப்படி அரசியலு இருந்தா சொல்லுங்கையா...      

*******************************************************************************



ஒட்டு மிஷினில் தனி பட்டன்..........
ஒட்டு மிஷினில் தனி பட்டன் வைத்து எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று உச்ச நீதி மன்றம் உத்தரவு 
கருத்து கருந்தேள்.....

ஆமாம்...இவிங்க உத்தரவு போடுவாயிங்க....அவிங்க எல்லாரும் பாராளுமன்றத்தில கூடி அவசர சட்டம் போடுவாயிங்க... நாட்டாம...தீர்ப்ப மாத்து-னு   ஒட்டு போடுவாயிங்க..இப்படித்தான் கிரிமினல்ஸ் தேர்தல்ல நிற்க கூடாதுன்னு சொன்னாயிங்க..இப்பலாம் இப்படி சட்டம் போடுறதும் போட்ட சட்டம் உடனே இத்துப் போறதும்....

*********************************************************************************


கொசுறு தகவல்...........பழநி அருகே குகை ஓவியம்.....
ஆண்டிப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குகையில் 4,000 ஆண்டு பழைமையான பாறை ஓவியமும் கல்வெட்டு எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டது...அதில் சில சிதைந்தும் முழுமையாகவும் உள்ளன 
கருத்து கருந்தேள்............தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அய்யா...நல்லா ஆய்யிங்க..ச்சே...ஆய்வு செய்து பாருங்க........அது வௌவ்வாலு ஆ........ய்...யாக இருக்கப்போகுது?



   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1