google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பேபி (இந்தி)-சினிமா விமர்சனம்

Thursday, January 29, 2015

பேபி (இந்தி)-சினிமா விமர்சனம்

நீரஜ் பாண்டேயின் அற்புதமான இயக்கத்தில் அக்ஷய் குமாரின் அதிரடி நடிப்பில் இதுவரை பாலிவுட் கண்டிராத அதிரடி உளவு த்திரிலர் திரைப்படம்....பேபி 
ஆனாலும் பாகிஸ்தானில் திரையிட தடைசெய்யப்பட்டுள்ளது

பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய மக்களையும் நாட்டையும்  காக்க பெரோஸ் (டேனி டென்சோங்பா) என்ற  இந்திய பாதுகாப்பு படை அதிகாரி தலைமையில்  நடக்கும்  ரகசிய நடவடிக்கைகள் (பேபி) பற்றிய கற்பனை கதையே பேபி படத்தின் கதைக்கரு

துருக்கியில் தன் சக இந்திய பாதுகாப்பு அதிகாரியை காப்பாற்றும் போராட்டத்தில் அஜய் ராஜ்புத் (அக்ஷய் குமார்) இந்தியாவில் டெல்லியில் உள்ள ஒரு மாலை (Mall) சீர்குலைக்கும் பயங்கரவாதிகளின் சதி திட்டத்தை கண்டுபிடிக்கிறார் 

அஜய் ராஜ்புத் தன் நண்பர் ஜெய் (ரானா தகுபதி) யுடன்  டெல்லி மாலை (Mall) யும் பொதுமக்களையும்  காக்கும் போராட்டத்தில் பயங்கரவாதிகளின் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் திட்டத்தையும்...........

பாக்கிஸ்தான்-இந்தியா எல்லையில் தொல்லைகள் செய்யும் பயங்கரவாத சூத்திரதாரி மவுலானா (ரஸீத் நாஸ்) என்பவன் சிறையிலிருக்கும் பயங்கரவாதி பிலால் (கே.கே.மேனன்) என்பவனை தப்பிக்கச் செய்யும் முயற்சியையும்..........

தடுக்க முயலும் போது நடக்கும்  ஒரு குண்டுவெடிப்பில் அஜய் ராஜ்புத்-ஜெய் தவிர அனைவரும் இறந்துவிடுகிறார்கள் 

அதுக்கும் மேல........

நேபாலில் இன்னொரு பயங்கரவாதி வாசிம் கான் (சுஷந்த் சிங்) என்பவனின் பயங்கர சதித்திட்டத்தை முறியடிக்க அஜய் ராஜ்புத் தன் சக அதிகாரி பிரியா (டாப்சி பானு) வுடன் கணவன்-மனைவியாக நாடகமாடி முயற்சிக்கிறார்கள் 

பேபியின் கடைசி நடவடிக்கையாக.......
பேபியின் தலைமை அதிகாரி பெரோஸ் அஜய்-ஜெய் ஆகியோரை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப...
அவர்கள்  அங்கே மறைந்திருக்கும் பயங்கரவாதி பிலாலை கண்டுபிடித்து கொல்கிறார்கள் 

அப்படியே விமானநிலையத்தில் சவுதி போலீஸிடமிருந்து  தப்பித்து பயங்கரவாதி மவுலானாவையும் தந்திரமாக இந்தியாவுக்கு உயிருடன் கடத்தி வருகிறார்கள்
முடிவு.........பாரத் மாதா கி ஜெ!!!

இயக்குனர் நீரஜ் பாண்டே......இப்படத்தின்  காட்சிப்படுத்தலில்   ஒரு சீரான  தெளிவு  இல்லாமல் இருந்தாலும் பாகிஸ்தான் பயங்கரவாத முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரிப்பதிலிருந்து தவறவில்லை அதனால்தான் பாகிஸ்தானில் இப்படம் திரையிடப்படவில்லை

அக்ஷய் குமார்......அவரது வழக்கமான குரங்கு காமெடி சேட்டைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ரொம்ப சீரியஸாக நடித்துள்ளார்
 
இப்படம் 5 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தாலும் வலைதளங்களில் இப்படத்தை ஏனோ தானோ என்றே எழுதுகின்றன

நம்ம தமிழ் சினிமாவில் இதுபோன்ற கேப்டன் விஜயகாந்த் படங்களை நாம் எப்போதோ பார்த்தாகிவிட்டது எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருக்கும் தமிழன் சினிமாவில் மட்டும் பின்னடைவானா....? தமிழனடா! கேப்டன்டா!!

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1