google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மேதைகள் காட்டிய பாதைகள்!

Sunday, October 28, 2012

மேதைகள் காட்டிய பாதைகள்!



நான்கு வயது வரை
பேசுவதற்கு
வாயைத் திறக்கவில்லை
ஏழு வயது வரை
எழுத்துக் கூட்டிகூட 
படிக்க முடியவில்லை
பெற்றோரும் ஆசிரியரும்
மண ஊனமுற்றவன் என்று
முடிவு செய்தார்கள்
அந்தச் சிறுவனே
இயற்பியலின்
பொதுச் சார்பியல் கோட்பாடு
கண்டறிந்தமைக்கு
நோபல் பரிசு பெற்ற
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

எந்த கற்பனை வளமும்
எந்த அரிய சிந்தனையும்
இல்லாதவர் என்று
பத்திரிக்கை ஆசிரியரால்
பதவி நீக்கப்பட்டவரே
உலகம் முழுவதும்
திரைப்படம் தீம் பார்க் என்று
பில்லியன்கள் குவித்த
வர்த்தக நாயகர் வால்ட் டிஸ்னி.

பள்ளிப் படிப்பிலும்
பின்தங்கி இருந்தவர்
குடும்பப் பண்ணையை
நிர்வகிப்பதிலும்
தோல்வியைத் தழுவியவர்
அவரே அறிஞர் ஐசக் நியுட்டன்
பிரபஞ்ச ஈர்ப்பு, இயக்கவியல்,
ஒளியியல் விதிகளை
உலகத்துக்கு அறிவித்தவர.

எதையும் கற்றுக்கொள்ளத்
தெரியாத முட்டாள் என்று
ஆசிரியர்களால்
புறக்கணிக்கப்பட்டவன்
இரண்டு முறை வேலையிலிருந்து
புறக்கணிக்கப்பட்டவன்
எதற்கும் அருகதையற்றவன் என்று
எல்லோருக்கும் ஏளனமானவன்  
ஆயிரம் முறைகளுக்குமேல்
ஆய்வு தோல்வியடைந்தாலும்
அயராமல் வெற்றியடைந்து
மின்சார விளக்கை கண்டறிந்து
மேதையானவர் தாமஸ் எடிசன்


தோல்வியடையும் போது
துவண்டு போகாதே!. என் தோழா!
இந்த மாமேதைகளை
மனதில் நினைத்துக் கொள்!
இந்த மந்திரத்தை
மனதில் உச்சரித்துக் கொள்!

“சில நேரங்களில் தோல்விதான்
வெற்றிக்கு முதல்படியாக இருக்கும்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1