google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மூனாறு

Thursday, April 05, 2012

மூனாறு


பனித்துளிகள் துயிலும்
புல்தரைகள்

தேயிலை தளிர்களை
தழுவிவரும் தென்றல்

இதமான குளிர்
முண்டாசு கட்டிய
மலை முகப்புகள்

விடியலுக்கு வாழ்த்துப்பாடும்
வண்டுகளின் ரிங்காரங்கள்

எனக்கு முன் ஒரு பாதை
முடிவே இல்லாத பாதை
போதைஊட்டும் பாதை

யாரும் இல்லை
நான் மட்டும் தனியாக
தன்னந்தனியாக
ஆனாலும்
பாதங்கள் படியவில்லை
கால்கள் தள்ளாடுது
பயணம் தொடரவில்லை

மூனாறு மலையழகே!
மன்னித்துவிடு

உன்னிடம்  
தினம்தோறும் நான் நடக்கும்
முட்டிமோதி தள்ளும்
தெருவீதியின்
நெரிசல் இல்லை

கடை வீதியின்
இரைச்சல் இல்லை

உன் ஈர்ப்புவிசை
என்னை ஈர்க்கவில்லை 
**************************
காணொளி-Rajnikanth in Malayala Karaioram


                  Thanks-YouTube-
Uploaded by rajshritamil on Jul 1, 2009
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1