பிச்சையெடுக்க வந்த
புதுப் பரதேசிக்கு
பழைய பரதேசியின்
பவ்வியமான உபதேசம்..
முதல் தெரு
முதல் வீட்டுக்கு
முதல் வீட்டுக்கு
போய்விடாதே
அந்த அம்மா
வேண்டாவெறுப்பா
வெறுஞ்சோறு போடும்
விழுங்கமுடியாது!
இரண்டாம் தெரு
இரண்டாவது வீடு
கசாப்பு கடைக்காரு வீடு
தினமும் கறிச்சோறு
அத தின்னா அவஸ்த்த
அடக்கமுடியாது புஜத்த
மூன்றாம் தெரு
மூணாவது வீடு
அது காவல்காரர் வீடு
போகாதே அந்த தெருவோடு
பறிபோயிடும் உன் திருவோடு
கடைசித்தெரு
கடைசி வீடு
கடைசி வீடு
போய்விடாதே அந்தவீடு
அந்த அம்மா
விலையில்லா அரிசியில்
ஆக்கிய சோற்றை
அள்ளிப்போடும்
எதற்கும் கொடு
உன் கைபேசி நம்பரை
நல்ல சாப்பாடு
கிடக்கும் போது
நானே தெரியப்படுத்துகிறேன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |