google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மீண்டும் மனிதனாக...

Monday, April 09, 2012

மீண்டும் மனிதனாக...



பணமே!
உன்னால்தான்
விருதுகளை 
வாங்கிக் குவித்தேன்
உலகையே 
மதிக்கவைத்தேன்
உண்மையை 
பொய்யாக்கினேன்.
படிக்காமலே 
டாக்டரானேன்
மங்கயர்களை 
பஞ்சனை கொண்டேன்
மக்களை வாங்கி 
மந்திரியானேன்

நினைத்தவுடன்
கடவுளைக் கண்டேன்
பிறகு நானே 
கடவுளாகிவிட்டேன்.

எல்லாம் சரிதான்
ஆனால்
எதையோ இழந்துவிட்டேன்?
எதையோ இழந்துவிட்டேன்?


பத்தும்செய்த பணமே!
மீண்டும் என்னை மனிதனாக்கு!
நேயமுள்ள மனிதனாக்கு!     



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1