google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நிலநடுக்கம்

Wednesday, April 11, 2012

நிலநடுக்கம்



மக்களை சிரிக்க வைக்க
பூமாதேவி மூட்டும் கிச்சு கிச்சு
சிலநேரங்களில் தாலாட்டு
சிலநேரங்களில் தள்ளாட்டு

பாவமென்று நினைத்தால்
குண்டூசியால் குத்துவாள்
கோபம வந்துவிட்டால்   
கடப்பாரையால் கொன்றுவிடுவாள்  

சிலநேரங்களில் சிறுபிள்ளைபோல்  
விளயாண்டது போதுமென்று
வீடுகளை களைத்துப்போடுவாள்

அப்படியே போகிறபோக்கில்
அவள் தங்கை சுனாமியிடம் சொல்லி
அகப்படுவதைஎல்லாம் சுருட்டிக்கொள்வாள்.

எது எப்படியோ....
எங்க ஊரு தொலைகாட்சிக்கு
அவல் கிடைச்சிப்போச்சு!   
எங்க ஊரு மந்திரிகளுக்கு
நிவாரணம் வசுளாகிப்போச்சு!  

(ஊரே நிலநடுக்கத்தால் 
நடுங்கும்போது 
உமக்கு  ஏன் இந்த சிரிப்பு? 
எனும் அன்பர்களுக்கு......
எங்க வீட்டிலும் 
பாத்திரங்கள் பறக்கும் 
நிலநடுக்கம் வரும் 
என் மனைவி ரூபத்திலும்) 
   
Earthquake by petrovsky

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1