கஷ்ட்டப்படும் போதேல்லாம்
என்னை ஏன் பெற்றாய்?
என்று தாய்மீது கோபம.
பகட்டான உலகத்தில்
ஏன் எளிமையாக வளர்த்தாய்?
என்று தந்தைமீது
கோபம்.
உடன்பிறந்தவர்கள் ஒட்டுண்ணிகள்
உறவினர்கள் உதவாக்கரைகள்.
இப்படி எனக்கு நிறைய
கோபங்கள்
கோபங்கள் எரிச்சல்களாகி
....
இப்போது வீட்டில்
எல்லோருக்கும்
என்மீது கோபம்.
மருத்துவரிடம் போனால்
உயர் இரத்தழுத்தம்
வெளியே சொன்னால்
பைத்தியக்காரத்தனம்
யாரிடம் சொல்வது?
யாரிடம் கேட்பது?
கடவுளைத் தேடினால்
அவரையும் காணவில்லை.
அவருக்கும் என்மேல்
கோபமோ?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |