வாழ்வில் வந்த
இன்பங்கள் நிறைய
துன்பங்கள் நிறைய
இன்பங்கள் வந்தபோது
துள்ளிக் குதிக்கவில்லை
துன்பங்கள் வந்தபோது
துவண்டு போனதில்லை
பதவிகள்
பாராட்டுக்கள்
பரிசுகள்
பாராதது எதுவுமில்லை
பார்த்தாலும் மயங்கவில்லை
எழுதி பிழைக்கும்
எத்தன் அல்ல
என் எழுத்துக்கள்
என் உள்ளத்தின்
வெளிப்பாடுகள்
என் உணர்வுகளின்
பிரதிபலிப்புகள்
எழுதுவது
எதற்கு என்று
எனக்கே தெரியாது
ஆனால்
எழுதுவேன்
எழுதிக்கொண்டே...
இறந்து போனாலும்
என் எழுத்துக்கள்
பேசிக்கொண்டே இருக்கும்.
இது-
மனகலக்கமல்ல
மௌனத்தின் வெளிப்பாடு!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |