மாமலையும்
மடுவாகிடுமாம்
மங்கையின்
மலர்விழி அசைவில்..
அன்பே!
எனக்கு வேண்டாம்
மடுவும் வடுவும்
உன் வாயிலிருந்து
வந்தால் போதும்...
வார்த்தை ஓன்று-
காதல் என்று...
வார்த்தை ஓன்று-
காதல் என்று...
கோடை மழையாய்
விழுந்தாலே போதும்..
பாலையான என் இதயம்
பசுஞ்சோலையாகிவிடும்
வார்த்தை ஓன்று-
காதல் என்று...
சொன்னால் போதும்
‘கனவு காணுங்கள்’ என்று
கண்டு கசந்த கனவுகள்
கலையாமல் என்னிடம்
இனிப்பாய் இருந்துவிடும்
வார்த்தை ஓன்று-
காதல் என்று...
வந்தால் நன்று
இருண்ட என் வாழ்வு
கூடங்குளத்திலிருந்து
கரண்ட் வந்ததுபோல்
வெளிச்சமாகிவிடும்
வார்த்தை ஓன்று-
காதல் என்று...
உன்னிடமிருந்து
வரும் என்று-நீ
வரும் வழி நின்று
இதயத்தை ஏந்துகிறேன்
கைகளில் இன்று!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |