google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வார்த்தை ஓன்று காதல் என்று

Wednesday, May 16, 2012

வார்த்தை ஓன்று காதல் என்று


மாமலையும்
மடுவாகிடுமாம்
மங்கையின்
மலர்விழி அசைவில்..  
அன்பே!
எனக்கு வேண்டாம்
மடுவும் வடுவும்     
உன் வாயிலிருந்து
வந்தால் போதும்...
வார்த்தை ஓன்று-
காதல் என்று...

வார்த்தை ஓன்று-
காதல் என்று...
கோடை மழையாய்
விழுந்தாலே போதும்..
பாலையான என் இதயம்   
பசுஞ்சோலையாகிவிடும்  

வார்த்தை ஓன்று-
காதல் என்று...
சொன்னால் போதும்
‘கனவு காணுங்கள் என்று
கண்டு கசந்த கனவுகள்
கலையாமல் என்னிடம்  
இனிப்பாய் இருந்துவிடும்  
  
வார்த்தை ஓன்று-
காதல் என்று...
வந்தால் நன்று
இருண்ட என் வாழ்வு
கூடங்குளத்திலிருந்து
கரண்ட் வந்ததுபோல்
வெளிச்சமாகிவிடும்
 
வார்த்தை ஓன்று-
காதல் என்று...
உன்னிடமிருந்து
வரும் என்று-நீ
வரும் வழி நின்று   
இதயத்தை ஏந்துகிறேன்
கைகளில் இன்று! 
Poththivachcha mallika... by J.Ketharan
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1