ஆடாத ஊஞ்சலில்
அமரமாட்டேன்
அசையாத தேரை
இழுக்கமாட்டேன்
கூடாத நடப்பை
கூட்டமாட்டேன்
கோடானு கோடி
கொடுத்தாலும்
பிறர் பாடலை
பாடமாட்டேன்
ஆடை விழுந்தால்
பாலைக்கூட
பருகமாட்டேன்
அறிவு அழியுமெனில்
அமுதைக்கூட
அருந்தமாட்டேன்
ஆனாலும்
அன்பே!
விரும்பிவிட்டேன் உன்னை
வெறுத்துவிடாதே என்னை
எரிக்கவேண்டாம் நீயே
எரிந்துபோவேன் நானே
எரியும் தீயில் தானே!
காதல் நோயில் தானே
கருகித்தான் போனேனே!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |