google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கருகித்தான் போனேனே!

Wednesday, May 16, 2012

கருகித்தான் போனேனே!


ஆடாத ஊஞ்சலில்
அமரமாட்டேன்
அசையாத தேரை
இழுக்கமாட்டேன்
கூடாத நடப்பை
கூட்டமாட்டேன்

கோடானு கோடி
கொடுத்தாலும்
பிறர் பாடலை
பாடமாட்டேன்

ஆடை விழுந்தால்  
பாலைக்கூட
பருகமாட்டேன்

அறிவு அழியுமெனில்
அமுதைக்கூட
அருந்தமாட்டேன் 

ஆனாலும்

அன்பே!
விரும்பிவிட்டேன் உன்னை
வெறுத்துவிடாதே என்னை
எரிக்கவேண்டாம் நீயே
எரிந்துபோவேன் நானே
எரியும் தீயில் தானே!

காதல் நோயில் தானே
கருகித்தான் போனேனே!
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1